வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2008 - அக்டோபர் 31:
- கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில் பிள்ளையான் சிறு காயங்களுக்குள்ளானார். (த ஐலண்ட்)
- கிளிநொச்சி ஜெயந்தி நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தி மக்களின் வீடுகளுக்கு அழிவை ஏற்படுத்தியது. (புதினம்)
- அக்டோபர் 29:
- மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர். (ஏஎஃப்பி)
- கிளிநொச்சி, பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டு, 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 28: மட்டக்களப்பில் செங்கலடியில் கருணா குழுவின் முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டு, ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டனர். (டெய்லிமிரர்)
- அக்டோபர் 27: அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரை விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 26: ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய நடுவண் அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்தார். (புதினம்)
- அக்டோபர் 24:
- ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் படையினர் செப்டம்பர் 2008 வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டு 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்ததாக இலங்கைப் படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. (புதினம்)
- கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பாடசாலை ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- அக்டோபர் 23:
- அம்பாறை மாவட்டத்தில் உள்ள வக்குமுட்டியா பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்தார். (புதினம்)
- நாச்சிக்குடா தொடக்கம் புத்துவெட்டுவான் வரையிலான களமுனைகளில் 47 படையினர் கொல்லப்பட்டு, 87 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- அக்டோபர் 20: கிளிநொச்சியின் தென்மேற்கே நாச்சிக்குடா பகுதியைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (பிபிசி), (புதினம்)
- அக்டோபர் 19: அம்பாந்தோட்டை, கதிர்காமம் பகுதியில் படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாதோரினால் தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (சண்டே டைம்ஸ்)
- அக்டோபர் 11:
- அக்டோபர் 10: மட்டக்களப்பு பாலையடிவெட்டை பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 9:
- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். (புதினம்)
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொறலஸ்கமுவ சந்தியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் உட்பட 6 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 7:
- அக்டோபர் 6:
- அக்டோபர் 5: இலங்கை பிரச்சினையில் இந்திய நடுவண் அரசு தலையிட வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். (புதினம்)
- அக்டோபர் 3: இலங்கை வானூர்திகள் கிளிநொச்சி நகரில் நடத்திய குண்டுத்தாக்குதலில் தழிழீழ காவல்துறை நடுவப்பணியகம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம், அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பன அழிக்கப்பட்டன. (புதினம்), (புதினம்)
- அக்டோபர் 2:
- அக்டோபர் 1:
- கிளிநொச்சியில் இயங்கி வந்த உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது இலங்கை வான்படை குண்டுவீசி அழித்தது. (புதினம்)
- கிளிநொச்சி நகரில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். (புதினம்)
|