வேலிபருத்தி
வேலிபருத்தி என்பது அசகிலோபியாடோடியா குடும்பத்தை சார்ந்த ஏறுகொடி தாவரம் ஆகும்.[1] இத்தாவரத்தைக் கொண்டு பல நோய்களுக்கான களிம்புகள் பழங்காலம் முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.[1] பெயர்கள்வேலிப்பருத்திக்கு உத்தமமாகாணி, உத்தமக்கன்னிகை, அச்சாணி மூலி, உத்தமதாளி போன்ற வேறு பெயர்களாலும் உண்டு. இதன் காய் முற்றி வெடிக்கும்போது, உள்ளிருக்கும் இதன் ‘பஞ்சு சூழ் விதைகள்’ காற்றில் மிதந்து வேலியோரங்களில் விழுந்து கொடியாகப் படரும். இதன் காரணமாக இதற்கு ‘வேலிப்பருத்தி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. விளக்கம்வேலிப்பருத்தியானது இதய வடிவ இலைகளைக் கொண்டுள்ளன. இந்த இலைகளைத் தொடும்போது மென்மையான உணர்வைக் கொடுக்கும். இதன் இலைக் காம்பைக் கிள்ளினால் பால் வெளியேறும். இதில் சிறு முட்களைக் கொண்ட காய்கள் உண்டு. இத்தாவரத்தில் டானின்கள் (Tannins), ஃப்ளேவனாய்ட்கள் (Flavanoids), புரதங்கள் போன்ற நலக்கூறுகள் உள்ளன.[2] வரம்பு மற்றும் வாழ்விடம்இது மலாய் தீபகற்பத்தில் இருந்து மியான்மர், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், ஆப்கானித்தான் வழியாக அராபியத் தீபகற்பம் மற்றும் எகிப்திலிருந்து நடு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவரை பரவியுள்ளது.[3] இது பெரும்பாலும் சாலையோரங்களில், வனப்பகுதி அல்லது கடலோர வனப்பகுதிகளில் காணப்படுகிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia