அங்கோர் தோம் நகரம்அங்கோர் தோம் நகரம், இன்றைய கம்போடியாவில் அமைந்துள்ளது. இது நோகோர்தோம் எனவும் அழைக்கப்படுகிறது. இது கெமர் பேரரசின் கடைசி மற்றும் நீடித்த தலைநகரம் ஆகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னர் ஏழாம் செயவர்மன் அவர்களால் நிறுவப்பட்டது.[1] :378–382 :170 இது 9 கி.மீ சதுர பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நகரத்திற்குள் முந்தைய காலங்களிலிருந்த பல நினைவுச்சின்னங்கள் மற்றும் செயவர்மன் மற்றும் அவரது வாரிசுகள் நிறுவியவை உள்ளன. நகரின் மையத்தில் செயவர்மனின் மாநில ஆலயமான பேயோன் உள்ளது. மற்ற முக்கிய இடங்கள் வெற்றிச் சதுக்கத்தைச் சுற்றி வடக்கு திசையில் அமைந்துள்ளன. இந்த நகரம் ஒரு மிகப் பெரிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும் இதைக் கண்டுகளிக்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். சொற்பிறப்புஅங்கோர் தோம் ( கெமர்: អង្គរធំ ) மற்றொரு மாற்றுப் பெயரான நோகோர் தோமின் பெயர் உருமாற்றமே ஆகும். இது தவறான உச்சரிப்பில் அழைப்பதை புறக்கணித்ததன் காரணமாக தற்போது அழைக்கப்படும் பெயர் சரியானது என்று நம்பப்படுகிறது. நோகோர் என்கிற சொல் சமசுகிருத மொழியில் நகாரா என்பதிலிருந்து பெறப்படுகிறது. இதற்கு நகரம் என்று பொருள் உள்ளது. (சொல் தேவநாகரி, नगर), கெமெர் சொல்லான தோம் என்பது 'மிகப் பெரிய' என்கிற பொருளில் உள்ளது. அதனால் இந்த இரு சொற்களையும் இணைத்து நோகோர் தோம் என அழைக்கப்பட்டது. பின்னர் அங்கோர் தோம் என்று பெயர் மாற்றப்பட்டது.[2] வரலாறுஏழாம் செயவர்மனுடைய பேரரசின் தலைநகராக அங்கோர் தோம் நிறுவப்பட்டது, மேலும் இது, அவரது பெரிய கட்டிடத் திட்டத்தின் மையமாகவும் இருந்தது. நகரத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டு செயவர்மனை மணமகனாகவும், நகரத்தை அவரது மணமகளாகவும் குறிப்பிடுகிறது. :121 இருப்பினும், கெமர் பேரரசின் முதல் தலைநகராக அங்கோர் தோம் இல்லை. இங்குள்ள யசோதரபுரம், மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இது சற்று வடமேற்கே மையமாக இருந்தது. மேலும் அங்கோர் தோம் அதன் பகுதிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. நகருக்குள்ளேயே மிகவும் குறிப்பிடத்தக்க முந்தைய கோயில்களான பபுஹான், மற்றும் பிமீனகஸ் இருந்தன. இவை அரச அரண்மனையுடன் இணைக்கப்பட்டது. கெமரியர்கள் அங்கோர் தோம் மற்றும் யசோதரபுரம் இடையே தெளிவான வேறுபாடுகளை வரையவில்லை. பதினான்காம் நூற்றாண்டில் கூட ஒரு கல்வெட்டு இதன் முந்தைய பெயரைப் பயன்படுத்தியது. :138 அங்கோர் தோமின் பெயர் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்தது. அங்கோர் தோமில் கட்டப்பட்டதாக அறியப்பட்ட கடைசி கோயில் 'மங்களார்த்தா" ஆகும். இது 1295 இல் அர்ப்பணிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போதுள்ள கட்டமைப்புகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன. ஆனால் எந்தவொரு புதிய படைப்புகளும் அழிந்துபோகக்கூடிய பொருட்களில் இருந்ததால் அவை நிலைக்கவில்லை. 1609 க்கு முன்னர் அங்கோர் தோம் கைவிடப்பட்டது. ஆரம்பகால மேற்கத்திய பார்வையாளர் ஒருவர் மக்கள் வசிக்காத ஒரு நகரத்தைப் பற்றி எழுதியபோது, பிளேட்டோவின் அட்லாண்டிஸ் போலவே அருமை" எனக் குறிப்பிடுகிறார். :140 இது 80,000-150,000 மக்கள் தொகையைத் தக்கவைத்ததாக நம்பப்படுகிறது. பாணிஅங்கோர் தோம் நகரம் பேயோன் பாணியில் அமைந்துள்ளது. இது பெரிய அளவிலான கட்டுமானத்தில், செந்நிறக் களிமண் கொண்டு பரவலான பயன்பாட்டில், நகரத்தின் ஒவ்வொரு நுழைவாயில்களிலும் முகப்பு-கோபுரங்களிலும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுரங்களிலும் நாகங்களின் மாபெரும் உருவங்கள் காணப்படுகிறது. பிரபலமான கலாச்சாரத்தில்பின்வரும் வெளிநாட்டு பத்திரிகைகள் மற்றும் திரைப்படங்களில் அங்கோர் தோம் நகரம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
1933 ஆம் ஆண்டு வெளியான கிங் காங் திரைப்படத்தில் அங்கோர் வளாகம் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia