அடுத்தாத்து ஆல்பர்ட்
அடுத்தாத்து ஆல்பர்ட் (Aduthathu Albert) இயக்குநர் ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபு, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. என். இரங்கராஜன் தயாரித்த இப்படம் இளையராஜாவின் இசையில், ஜூலை 12, 1985 அன்று வெளியிடப்பட்டது.[1][2] கதைகிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் ( பிரபு ) இராதா ( ஊர்வசி ) என்ற பிராமணப் பெண்ணை காரணமேயில்லாமல் வெறுக்கிறான். ஆல்பர்ட்டின் சகோதரி மேரியும் இராதாவின் சகோதரன் இராஜாவும் காதலிக்கிறார்கள். ஆல்பர்ட் பின்னர் காதலர்களுக்கு உதவ முடிவு செய்கிறான். ஆனால், குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக காதலர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆல்பர்ட்டும் இராதாவும் சேர்ந்து தங்கள் குடும்பத்தினருக்கு ஒரு பாடம் கற்பிக்க தாங்களும் இறந்து விட்டதாக ஒரு நாடகம் நடத்துகிறார்கள். இறுதியில் இவர்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். நடிகர்கள்
ஒலிப்பதிவு
இப்படத்தின் இசையை இசையமைப்பாளர் இளையராஜா மேற்கொண்டார். 1985 ஆம் ஆண்டில் வெளியான இந்த ஒலிப்பதிவில், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், பொன்னருவி மற்றும் காதல் மதி ஆகியோரால் எழுதப்பட்ட பாடல்களுடன் 5 தடங்கள் உள்ளன.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia