அனுராதபுரம் அருங்காட்சியகம்
அனுராதபுரம் அருங்காட்சியகம், அனுராதபுர நூதனசாலை அல்லது புரவிது பவன (Anuradhapura Museum) என்பது, இலங்கையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்களுள் ஒன்று.[1] இது பிரேசன் மாளிகைக்கும், ருவான்வெலிசாயவுக்கும் இடையில் உள்ள அனுராதபுரம் பழைய கச்சேரிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 1947 ஆம் ஆண்டில் சேனரத் பரணவிதானவின் முயற்சியால் அமைக்கப்பட்டது.[2][3] இந்தத் தொல்லியல் அருங்காட்சியகம் கலாச்சார முக்கோணப் பகுதியில் உள்ள மிகப் பழைய அருங்காட்சியகங்களுள் ஒன்று.[4][5] இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தர் சிலைகள், கல்வெட்டுக்கள், வரைபடங்கள், பொம்மைகள், நாணயங்கள், அணிகலன்கள், மணிகள் போன்ற பல பொருட்கள் இவற்றுள் அடங்குகின்றன.[2][3] தூபாராமவில் உள்ள வட்டதாகே எனப்படும் வட்ட வடிவமான கட்டிடத்தின் மாதிரி ஒன்றும் இங்குள்ளது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia