அன்புச் சகோதரர்கள்
அன்புச் சகோதரர்கள் (Anbu Sagodharargal) 1973 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] லட்சுமி தீபக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், ஏ. வி. எம். ராஜன், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் இயக்குநர் லக்ஷ்மி தீபக்கால் ஏற்கனவே தெலுங்கில் தயாரித்து இயக்கிய பண்டடாட்டி கப்புரம் என்ற படத்தின் தழுவலாகும். கதைஇப்படம் நான்கு சகோதரர்கள் குறித்த கதையாகும். மூத்த அண்ணண் ஒரு விவசாயி (எஸ். வி. ரங்கராவ்) அடுத்தவர் ஒரு ஆலை தொழிலாளி (மேஜர் சுந்தரராஜன்) இவர்களின் உதவியால் மூன்றாவது சகோதரர் (ஏ. வி. எம். ராஜன்) இந்திய ஆட்சிப் பணியாளாராகிறார். கடைசி சகோதரர் கல்லூரி மாணவர் (ஜெய்சங்கர்) அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அப்போது ஒரு பெண் வஞ்சினத்துடன் அக்குடும்பத்துக்குள் வருகிறாள் குடும்பத்துக்குள் குழப்பங்களை உருவாக்குகிறாள். இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை. நடிகர்கள்
பாடல்கள்இப்படதிற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia