அல் சானுப் விளையாட்டரங்கம்
அல் சானுப் விளையாட்டரங்கம் (Al Janoub Stadium) கத்தார் நாட்டின் அல் வக்ரா நகரில் அமைந்துள்ளது.[3] முன்னதாக அல் வர்கா விளையாட்டரங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிஃபா அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்காக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.[4] உள்ளிழுக்கும் கூரை வகை விளையாட்டரங்கமான இது 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஈராக்-பிரித்தானிய கட்டிடக் கலைஞர் சகா அதீத்து மற்றும் அமெரிக்கப் பொறியியல் நிறுவனம் இணைந்து அல் சானுப் விளையாட்டரங்கம் வடிவமைத்தனர்.[5] பின்நவீனத்துவமும் புதிய எதிர்காலமும் கவனத்திற் கொள்ளப்பட்டு விளையாட்டரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவின் முத்துக் குளிப்பவர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய படகு தோவின் பாய்மரங்களைப் போல அரங்கத்தின் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது.[6] அல்-வக்ரா விளையாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இடமாக இது இருக்கும். அங்கு கத்தார் நாட்டின் பூர்வாங்கப் போட்டிகள் இங்கு நடைபெறும். அரங்கத்தில் 40,000 பேர் அமர்ந்து போட்டிகளை இரசிக்க முடியும். உலகக் கோப்பைக்குப் பிறகு பார்வையாளர்கள் இருக்கை எண்ணிக்கை 20,000 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[7] 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள்2022 பிஃபா உலகக் கோப்பை போட்டியின் போது அல் சானுப் விளையாட்டரங்கத்தில் ஏழு போட்டிகளை நடைபெறுகின்றன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia