ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் (Anders Behring Breivik, பிறப்பு 13 பெப்ரவரி 1979)[1]நோர்வே நாட்டு வலதுசாரி தீவிரவாதியும்[5] சூலை 22, 2011 அன்று அந்நாட்டுத் தலைநகர் ஓசுலோவில் நடந்த இரட்டைத் தாக்குதல்களில் குற்றமிழைத்தவராக ஒப்புக்கொண்டவரும் ஆவார்[6][7]. இந்த இரட்டைத் தாக்குதல்களில் அரசு அலுவலக கட்டிடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால் எட்டு பேரும் உதயா தீவில் நோர்வே தொழிலாளர் கட்சியின் இளந்தொழிலாளர் அணியின் முகாமில் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் 69 பேரும் கொல்லப்பட்டனர்.[8][9][10]
பிரீவிக்கின் வலதுசார்பு போராட்டக்கொள்கள் அவராலும் பிறராலும் எழுதி தொகுக்கப்பட்டு தாக்குதல் நிகழ்ந்த நாளன்று மின்னூடகமாக பிரீவிக்கால் தனது ஆங்கிலப் புனைப்பெயரில்[11][12] வெளியிடப்பட்ட[13]2083 – ஓர் ஐரோப்பிய விடுதலைப் பிரகடனம் (A European Declaration of Independence) என்ற உரைத்தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த உரைத்தொகுப்பில் அவரது மாற்று இனத்தினரிடமுள்ள அச்சம், வெளிப்படுகிறது; பண்பாட்டு பழமைவாதம், வலதுசார்பு பரப்புரை, தீவிர தேசியவாதம் மற்றும் இசுலாமியக் காழ்ப்புணர்வை ஆதரிக்கிறது.[14] மேலும் பன்முக பண்பாட்டையும் இசுலாம் மற்றும் அராபிய ஐரோப்பாவை அழித்து கிறித்தவ ஐரோப்பாவை நிலைநாட்டுவதை நோக்கமாக விவாதிக்கிறது.[15][16][17]
தாம் "கொடூரமான ஆனால் தேவையான" நடவடிக்கை எடுத்ததாக ஒப்புக்கொள்ளும் பிரீவிக் இவற்றை குற்றங்களாக ஏறக மறுத்துள்ளார்.[18][19] தனக்கு நோர்வேயிலும் பன்னாட்டளவிலும் உள்ள வலதுசார் அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதென்றும்[20][21] தான் சார்ந்துள்ள பன்னாட்டு இசுலாமிய எதிர்ப்பு பிணையத்தில் இருக் குழுக்கள் நோர்வேயிலும் மேலும் பல பிற நாடுகளிலும் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.இவற்றை காவல்துறை நம்பாதபோதும் மறுப்பெதுவும் வெளியிடவும் இல்லை.[19]
சூலை 25, 2011 அன்று பிரீவிக் குற்றவியல் சட்டத்தின் தீவிரவாதச் செயல்களான "சமூகத்தின் அடிப்படை செயல்களை குலைப்பதாக அல்லது அழிப்பதாகவும்" "மக்களிடையே பெரும் பயத்தை உண்டாக்கியதாகவும்" குற்றம் சாத்தப்பட்டு[19] நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பாக எட்டு வாரங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார்.[9][22]
2012 ஆகத்து 24 இல் ஒசுலோ நீதிமன்றம் ஆண்டர்சு பிரீவிக் 77 பேரைக் கொன்ற குற்றவாளி எனவும், அவர் சிறந்த மனநிலையுடனேயே இக்குற்றங்களைப் புரிந்துள்ளார் எனவும் தீர்ப்பளித்து அவருக்கு 21 ஆண்டுகள் தடுப்புக் காவல் சிறைத்தண்டனை விதித்தது. அத்துடன் அவர் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க வேண்டும் எனவும், அதற்கு மேலும் அவர் சமூகத்திற்கு ஒவ்வாதவராக இருக்கும் பட்சத்தில் சிறைத்தண்டனை மேலும் நீடிக்கலாம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுவே நோர்வேயில் அளிக்கக்கூடிய அதிகபட்சத் தண்டனை ஆகும்[23]. நோர்வே நீதிமன்றம் சட்டபூர்வமானது அல்ல எனத் தான் கருதுவதால், மேன்முறையீடு செய்யப்போவதில்லை என பிரீவிக் தெரிவித்தார்[24].
↑"Dagens navn". Aftenposten, morgen: p. 10. 15 February 1979. "Aker hospital, Oslo, 13. February 1979. A boy. Name of parents. In Norwegian: (Aker sykehus, 13. ds.: En gutt. Wenche og Jens Breivik)"
↑Is Anders Breivik A 'Christian Terrorist'?. Huffington Post. "At the age of 15 I chose to be baptised and confirmed in the Norwegian State Church ... I consider myself to be 100% Christian."