ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
ஆதீர் ரஞ்சன் சௌத்திரி (Adhir Ranjan Chowdhury) (பிறப்பு:2 ஏப்ரல் 1956), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மே 2019-இல் பகரம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களைவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அரசியல் வாழ்க்கைஆதிர் ரஞ்சன் சௌத்திரி 1996-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில், நபாகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1999-இல் அதிர் ரஞ்சன் சௌத்திரி பகரம்பூர் மக்களவைத் தொகுதிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][5] 28 அக்டோபர் 2012-இல் சௌத்திரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இரயில்வே இணை அமைச்சராக பதவியேற்றார்.[6] 10 பிப்ரவரி 2014-இல் மேற்கு வங்காள காங்கிரசு கட்சியின் தலைவரானார்.[7] 19 சூன் 2019 அன்று மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் 2020 -2021 ஆண்டிற்கான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia