ஆனந்த் டெல்டும்டே
ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) ஓர் இந்திய எழுத்தாளரும், அறிஞரும் சமூக உரிமைப் போராளியுமாவார். இவர் கோவா மேலாண்மை நிறுவனத்தில், மேலாண்மை பேராசிரியராக உள்ளார். இந்தியாவில் சாதி அமைப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேலும், இவர் தலித்துகளின் உரிமைகளுக்காக பொதுவெளியில் வாதிடுபவர்.[1] இவர் மஹாராஸ்டிராவில் ரஜூர் என்ற சிறு நகரில் பிறந்தவர். இவரது மனைவி ரமா, டாக்டர் அம்பேத்காரின் பேத்தி ஆவார். கோரேகான் பீமா வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இவரது தம்பி மிலிந்த் டெல்டும்டே மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரும், நக்சலைட் தலைவரும் ஆவார். 13 நவம்பர் 2021 அன்று மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 26 நக்சலைட்டுகள், மகாராட்டிரா மாநில காவல்துறையினரால் கட்சிரோலி மாவட்ட வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.[2] கல்வி மற்றும் பணிதெல்தும்டே தனது பொறியியல் பட்டப்படிப்பை விசுவேசவரய்யா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பை அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் முடித்தார். கருநாடக மாநில திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.[3] இவர் சைபர்னேடிக் படிமமாக்கலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.[1] டெல்டும்டே ஒரு கல்வியாளராகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் செயல் அலுவலராகவும், பெட்ரோநெட் இந்திய நிறுவனத்தில் நிர்வாக மேலாளராகவும் இருந்தார்.[4][5] முதலில் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும், பிறகு கோவா மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[4][6][7] எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி என்ற பத்திரிக்கையில் "மார்ஜின் ஸ்பீக்" என்ற தலைப்பிலான பத்தியை எழுதி வந்தார்.[8] அவுட்லுக் இதழிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.[9] மேலும், தெகெல்கா என்ற பத்திரிக்கைக்காகவும்,[10] மற்றும் செமினார் என்ற வலைத்தளத்திலும் எழுதி வந்தார்.[11][12] புத்தகங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia