ஆர்சுத்திப்பட்டு
ஆர்சுத்திப்பட்டு (Arsuthipattu) என்பது, தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் இராகவம்பாள்புரம் ஊராட்சியில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். அமைவிடம்ஆர்சுத்திப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 18 கி.மீ தொலைவிலும், ஒரத்தநாட்டிற்கு வடக்கே 20 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் சடையார்கோவில் (5 கி.மீ.), சாலியமங்கலம் (4.5 கி.மீ.), அம்மாப்பேட்டை (14 கி.மீ.) ஆகிய ஊர்கள் உள்ளன. மக்கள் தொகை2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமம் 1593 மக்கள்தொகையை கொண்டுள்ளது.[1] வாக்காளர்கள்ஆர்சுத்திப்பட்டில் ஆண் வாக்காளர்கள் 716, பெண் வாக்காளர்கள் 739 என மொத்தம் 1445 வாக்காளர்கள் உள்ளனர். கல்வி நிலையம்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிலையங்கள் உள்ளன. போக்குவரத்துஇக்கிராமத்திலிருந்து சுமார் 4.5 கி.மீ தொலைவில் சாலியமங்கலத்தில் தொடருந்து போக்குவரத்து வசதி உள்ளது. திருவிழாதஞ்சை மாவட்டத்தில் இரணிய நாடகங்கள் பிரபலமாக நடைபெறும் ஊர்களில் ஆர்சுத்திப்பட்டு கிராமமும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள நரசிம்மர் கோவில் வழிபாடு சடங்கியலாக இந்நாடகங்கள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia