ஒரத்தநாடு
இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), கள்ளர் என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். அம்மன் பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.[4] பெயர்க்காரணம்ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.[5][சான்று தேவை] பேரூராட்சியின் அமைப்பு7.20 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் தஞ்சாவூர் 23 கி.மீ., கிழக்கில் மன்னார்குடி 23 கி.மீ., மேற்கில் கறம்பக்குடி 25 கி.மீ., தெற்கில் பட்டுக்கோட்டை 23 கி.மீ.,தென்கிழக்கில் மதுக்கூர் 25 கி.மீ., வடமேற்கில் அம்மாப்பேட்டை 24 கி.மீ., வடகிழக்கில் வல்லம் 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.[6] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 மக்கள்தொகையும் கொண்டது. [7][8] தொழில்ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது. விளையாட்டுதுடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. விழாக்காலங்களில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன. கல்லூரிகள்
ஆலயம்இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும். ஆட்சிஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன. போக்குவரத்துஒரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும், பட்டுக்கோட்டைக்கும் மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் அதிக பேருந்துகள் இயங்குகிறது.இது தவிர புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்ட தலைநகருக்கும் நேரடி பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia