ஆர். எஸ். தனேந்திரன்
டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் (ஆங்கிலம்; R.S. Thanenthiran; மலாய்: R.S. Thanenthiran; சீனம்: R.S. 他恩提兰; (பிறப்பு: 4 சூலை 1963) என்பவர் ஒரு மலேசிய இந்திய அரசியல்வாதி மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகும்.[1] இவர் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் (Malaysia Makkal Sakti Party) நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவரும் ஆவார். பொதுதனேந்திரன் 1963-ஆம் ஆண்டு சூலை 4-ஆம் தேதி கெடாவில் உள்ள சுங்கை பட்டாணியில் (Sungai Petani) பிறந்தார். 1990-ஆம் ஆண்டு, அவர் வாணி மணியம் (Vaney Maniam) என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கெடா பத்து பெக்காக்கா தேசியப் பள்ளியில் (SK Batu Pekaka) தன் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர், பின்னர் தன் உயர்நிலைக் கல்வியை பத்து பெக்காக்கா உயர்நிலைப் பள்ளியில் (SMK Kuala Ketil) மெற்கொண்டார். பின்னர் ஈப்போ உலுகிந்தா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் (Maktab Perguruan, Ulu Kinta, Ipoh) தம் ஆசிரியர்ப் பயிற்சியைப் பெற்றார்.[2] அரசியலுக்கு வருவதற்கு முன்பு தனேந்திரன், சில ஆண்டுகள் ஓர் ஆசிரியராகப் பணியாற்றினார். தனேந்திரன் கோரிக்கைதனேந்திரன் அவர்களின் கொள்கைப்பாடும்; மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய சித்தாந்தமும்; மலேசிய இந்தியர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதாகும். மலேசியாவில் உள்ள இந்திய அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தத்தெடுக்க வேண்டும் என்று தனேந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.[3] தேர்தல் முடிவுகள்2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நிபோங் திபால் மக்களவை தொகுதியில் ஆர்.எஸ். தனேந்திரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனேந்திரனுக்கு 10,660 வாக்குகள் கிடைத்தன. பாக்காத்தான் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சி வேட்பாளர் பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) என்பவருக்கு 42,188 வாக்குகள் கிடைத்தன.
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia