ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோயில்

அருள்மிகு காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோவில்
ஆவல்நத்தம் பசுவேஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஆவல்நத்தம், கிருஷ்ணகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:காசீஸ்வரர், பசுவேஸ்வரர்
தாயார்:விசாலாட்சி
குளம்:காசித்தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:2
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோயில் விவரப் பலகை

ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோயில் என்பவை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஆவல்நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில்களாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

காசீஸ்வரர் கோயில்

ஆவல்நத்தம் காசீஸ்வரர் கோயிலானது ஒரு குகைக் கோயிலாகும். இக்குகைக் கோயில் ஒரு பெரிய பாறையின் கீழ் இயற்கையாக அமைந்த குகையில் குடையப்பட்ட அமைப்பில் உள்ளது. இக்கோயில் பாறையின் கீழ்பகுதியில் உள்ள காரணத்தால் இதற்கு விமானம், துவாரபாலகர்கள் போன்றவை இல்லை. இக்கோயிலை அடைய கீழ்நோக்கிய வாயில் ஒன்று சுரங்கம் போல குடையப்பட்டுள்ளது. இதில் நுழைந்து சென்றால் உள்ளே விஸ்தாரமான கோயிலை அடையலாம். கோயிலில் ஒரே கருவறையில் தனித்தனியாக சுயம்புலிங்கமாக காசீஸ்வரரும், விசாலாட்சி அம்மனும் உள்ளனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பசுவேஸ்வரர் கோயில்

காசீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பசுவேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசீஸ்வரர் கோயிலைப்போன்று குகைக்கோயிலாக இல்லாமல் கட்டுமானக்கோயிலாக உள்ளது. இக்கோயில் மூலவரான பசுவேஸ்வரரின் கீழே சுயம்பு லிங்க அமைப்புக் காணப்படுகிறது.[3]

தீர்த்தங்கள்

இக்கோயிலுக்கு அருகில் நான்கு அடி நீளமும், ஏழு அடி அகலமும் கொண்ட தீர்த்தக்குளம் ஒன்றும், 41 அடிக்கு 41 அடி கொண்ட காசித்தீர்ரத்தம் என்னும் குளம் ஒன்றுமாக இரண்டு தீர்த்த்தங்கள் உள்ளன.

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

அமைவிடம்

கிருஷ்ணகிரி, ஒசூர் சாலையில் உள்ள குருபரபள்ளியில் இருந்து தீர்த்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் நெடுசாலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் உள்ள ஆவல்நத்தம் என்ற சிற்றூரில் இக்கோயில்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 97–99. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya