ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோயில்
![]() ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோயில் என்பவை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஆவல்நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில்களாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புகாசீஸ்வரர் கோயில்ஆவல்நத்தம் காசீஸ்வரர் கோயிலானது ஒரு குகைக் கோயிலாகும். இக்குகைக் கோயில் ஒரு பெரிய பாறையின் கீழ் இயற்கையாக அமைந்த குகையில் குடையப்பட்ட அமைப்பில் உள்ளது. இக்கோயில் பாறையின் கீழ்பகுதியில் உள்ள காரணத்தால் இதற்கு விமானம், துவாரபாலகர்கள் போன்றவை இல்லை. இக்கோயிலை அடைய கீழ்நோக்கிய வாயில் ஒன்று சுரங்கம் போல குடையப்பட்டுள்ளது. இதில் நுழைந்து சென்றால் உள்ளே விஸ்தாரமான கோயிலை அடையலாம். கோயிலில் ஒரே கருவறையில் தனித்தனியாக சுயம்புலிங்கமாக காசீஸ்வரரும், விசாலாட்சி அம்மனும் உள்ளனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பசுவேஸ்வரர் கோயில்காசீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பசுவேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசீஸ்வரர் கோயிலைப்போன்று குகைக்கோயிலாக இல்லாமல் கட்டுமானக்கோயிலாக உள்ளது. இக்கோயில் மூலவரான பசுவேஸ்வரரின் கீழே சுயம்பு லிங்க அமைப்புக் காணப்படுகிறது.[3] தீர்த்தங்கள்இக்கோயிலுக்கு அருகில் நான்கு அடி நீளமும், ஏழு அடி அகலமும் கொண்ட தீர்த்தக்குளம் ஒன்றும், 41 அடிக்கு 41 அடி கொண்ட காசித்தீர்ரத்தம் என்னும் குளம் ஒன்றுமாக இரண்டு தீர்த்த்தங்கள் உள்ளன. பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. அமைவிடம்கிருஷ்ணகிரி, ஒசூர் சாலையில் உள்ள குருபரபள்ளியில் இருந்து தீர்த்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் நெடுசாலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் உள்ள ஆவல்நத்தம் என்ற சிற்றூரில் இக்கோயில்கள் அமைந்துள்ளன. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia