இந்தியப் பல் மருத்துவ மன்றம்
இந்தியப் பல் மருத்துவ மன்றம் (Dental Council of India) என்பது பல் சட்டம் 1948கீழ் பதிவு செய்த அமைப்பாகும்.[1] இந்தியாவில் பல் கல்வி மற்றும் பல் மருத்துவத் தொழிலைக் கட்டுப்படுத்தும் அமைப்பு இதுவாகும். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மாநில பல் மன்றம் மூலம் நிதியளிக்கப்படுகிறது. குறிக்கோள்கள்
செயல்பாடுபல் மருத்துவக் கல்வி, பல் தொழில் மற்றும் பல் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 'பல் மருத்துவர்கள் சட்டம் 1948 (1948 இன் XVI) பாராளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் இந்தியப் பல் மன்றம் அமைக்கப்பட்டது. இச்சட்டம் மார்ச், 1949இல் நடைமுறைக்கு வந்தது. இந்த மன்றம் மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழகங்கள், பல் கல்லூரிகள், இந்திய மருத்துவ கழகம் மற்றும் பல் மருத்துவத்தின் தனியார் பயிற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரிவுகளை உள்ளடக்கியது. சுகாதார சேவைகளின் இயக்குநர் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருப்பார். மன்றம் தமது உறுப்பினர்களிலிருந்து தலைவர், துணைத்தலைவர், மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருடன் முன்னாள் அலுவல் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர்கள் செயற்குழுவினை அமைக்கின்றனர். செயற்குழு என்பது இந்த அமைப்பின் ஆளும் குழுவாகும். இது சபையின் அனைத்து நடைமுறை, நிதி மற்றும் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்களைக் கையாள்கிறது. மன்றம் அரசாங்க நிதியினால் செயல்படுகிறது. இம்மன்றத்தின் வருமான ஆதாரங்களாகப் பல் மருத்துவ சட்டத்தின் 53வது பிரிவின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநில பல் மன்றங்கள் செலுத்தும் கட்டணங்களில் 1/4 பங்கு ஆகும். பல்மருத்துவ சட்டம், 1948 இன் பிரிவு 15இன் கீழ் ஆய்வு செய்வதற்கான பல்வேறு பல் நிறுவனங்களிடமிருந்தும், புதிய பல் கல்லூரி அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்க நிறுவனத்திடமிருந்து விண்ணப்பக் கட்டணம், பிரிவு 10 ஏ இன் கீழ் பல் கல்லூரிகளில் உயர் படிப்பு படிப்புகள் மற்றும் சேர்க்கை திறன் அதிகரித்தல் பல் மருத்துவர்கள் சட்டம், 1948 இல் பல் மருத்துவர்கள் (திருத்தம்) சட்டம், 1993ஆல் திருத்தப்பட்டது கீழ் செலுத்தப்படுகிறது.. எதிர்காலம்இந்திய மருத்துவ கழகம், இந்திய செவிலிய மன்றம் மற்றும் இந்திய மருந்தியல் மன்றம் போன்ற பிற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இந்தியப் பல் மன்றத்தினையும் கலைக்க ஒரு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] ஜனவரி 2020இல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய பல் மன்ற மசோதாவை வரைவு செய்தது. இதன் மூலம் இந்தியப் பல் மன்றத்திற்குப் பதிலாக தேசிய பல் மன்றமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த ஒழுங்குமுறை அமைப்புகள் சுகாதாரத்திற்கான மனிதவளத்திற்கான தேசிய மருத்துவ ஆணையம் எனப்படும் பொதுவான சட்டரீதியான அமைப்புடன் மாற்ற முன்மொழியப்பட்டது. இந்த நடவடிக்கையானது இந்தியப் பல் மன்றத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்,[3] இந்தியப் பல் மன்ற முன்னாள் தலைவர் அனில் கோலியிடம் நடுவண் புலனாய்வுச் செயலகம் நடத்திய சோதனைகள்,[4] மற்றும் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் ஆகியோரால் களங்கப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia