தேசிய மருத்துவ ஆணையம்
தேசிய மருத்துவ ஆணையம் (என். எம். சி)(National Medical Commission) என்பது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மருத்துவத் துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் செயலை மேற்கொள்கிறது. இது செப்டம்பர் 25, 2020 அன்று இந்திய மருத்துவக் குழுவினை மாற்றி அமைக்கப்பட்டது.[1][2] இந்த ஆணைக்குழு மருத்துவத் தகுதிகளை அங்கீகரித்தல், மருத்துவப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவ பயிற்சியாளர்களுக்குப் பதிவு அளித்தல், மருத்துவ நடைமுறையைக் கண்காணித்தல், இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட மருத்துவ பணிகளை மேற்கொள்கிறது. இது 2019 ஜனவரியில் 6 மாதங்களுக்கு உத்தரவு மூலம் நிறுவப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்டத்திற்கு 2019 ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதலின் பேரின் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டது.[3] வரலாறு![]() நிதி ஆயோக், இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப் பரிந்துரைத்தது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. இதனடிப்படையில் இந்தியப் பிரதமரின் ஒப்புதல் மற்றும் இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 8, 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது.[4][5][6] இந்திய மருத்துவ கழகம் 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் 2019 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டது. மருத்துவ கழகத்தினை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, ஐந்து சிறப்பு மருத்துவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்வி முறையை ஜூலை 2017 முதல் கண்காணிக்கிறது.[சான்று தேவை] இந்திய மருத்துவ குழுமத்தினை (எம்.சி.ஐ) தேசிய மருத்துவ ஆணையமாக (என்.எம்.சி) மாற்றத் திட்டமிடல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவிற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுக்குப் பிறகு, இது நாடாளுமன்ற அமர்வுகளில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனால் இறுதி மசோதாவாக முன்மொழியப்பட்டது.[7] பின்னர் 2019ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.[8][9][10][11] இந்திய ஜனாதிபதி 2019 ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019க்கு ஒப்புதல் அளித்தார். இதனால் இது ஓர் சட்டமாக மாறியது.[2][4] தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாடுகள்தேசிய மருத்துவ ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:
இருக்கைகள்இந்த ஆணையம் நான்கு தன்னாட்சி இருக்கைகளைக் கொண்டுள்ளது:
கூட்டமைப்புதேசிய மருத்துவ ஆணையம் 33 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், இதில்: a) ஒரு தலைவர் (மருத்துவ வல்லுநர்கள் மட்டும்) b) 10 அலுவல்சாரா அலுவலர்கள்:
c) 22 பகுதிநேர உறுப்பினர்கள்:
இவர்களில் குறைந்தது 60% உறுப்பினர்கள் மருத்துவ பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும். மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia