பாகிஸ்தான் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா பிரதம அமைச்சர் லியாகத் அலி கான் ஜெனரல் பிராங்க் மெஸ்சர்வி[9] ஜெனரல் டக்லஸ் கிரேசி[9] மேஜர் குர்சித் அன்வர் Maj.[13] லெப்.கர்ணல் அஸ்லாம் கான்[7][8] கர்னல் முகமது அக்பர் கான்[14] கர்னல் சேர் கான்[14] மேஜர் ஜெனரல் ஜமான் கியானி[13] பிரிகேடியர் இராஜா ஹபீப் ரெக்மான்[15] மேஜர் வில்லியம் பிரவுன்[7]
முதலில் பஷ்தூன் மக்களும், பின்னர் பாகிஸ்தான் படையினரும் காஷ்மீரில் ஊடுவிருவினர். இவர்கள்து தாக்குதலை முறியடிக்க இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீரில் களத்தில் இறங்கினர்.
போர் நிறுத்தத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரின் வரைபடம், 31 டிசம்பர் 1948
இந்திய-பாகிஸ்தான் போர், 1947(Indo-Pakistani War of 1947), பிரித்தானியவின் இந்தியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆண்டே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், ஹரி சிங் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை தங்கள் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டி, 22 அக்டோபர் 1947 முதல் 31 டிசம்பர் 1948 முடிய நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போர் ஆகும்.[23] இப்போரில் பாகிஸ்தான், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. இந்தியா, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரில் இந்திய தரப்பில் 1,500 வீரர்கள் கொல்லப்பட்டனர், 3,500 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 6,000 வீரர்கள் கொல்லப்பட்டனர், 14,000 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்திய-பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு போர்களில் முதல் போர் என்பதால் இப்போரை முதல் இந்திய-பாகிஸ்தான் போர் என்பர்.
இசுலாமிய பெரும்பான்மை கொண்ட காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற, பாகிஸ்தானின் தூண்டிதலின் பேரில், 22 அக்டோபர் 1947 அன்று பஷ்தூன் பழங்குடி மக்களைக் கொண்ட போராளிகள் குழு, காஷ்மீர் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கினர். எனவே
மன்னர் ஹரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியைக் கோரினார். இந்தியா விதித்த நிபந்தனையின்படி, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா தன் இராணுவத்தை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியது.[24]
இந்தியா இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பஷ்தூன் மக்கள், வடக்கு நிலங்கள் முழுவதையும் மற்றும் மேற்கு காஷ்மீர் பகுதிகளில் (ஆசாத் காஷ்மீர்) சிறிது கைப்பற்றியது. எஞ்சிய ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தானுடன் போரிட்டு இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் அவை தலையிட்டு இந்திய-பாகிஸ்தான் போரை 1 சனவரி 1948-இல் முடிவுக்கு கொண்டு வந்தது.
Ministry of Defence, Government of India. Operations in Jammu and Kashmir 1947–1948. (1987). Thomson Press (India) Limited, New Delhi. This is the Indian Official History.
Sen, Maj Gen L.P.Slender Was The Thread: The Kashmir confrontation 1947–1948. (1969). Orient Longmans Ltd, New Delhi.
Vas, Lt Gen. E. A.Without Baggage: A personal account of the Jammu and Kashmir Operations 1947–1949. (1987). Natraj Publishers Dehradun. பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-85019-09-6.
The Indian Armour: History Of The Indian Armoured Corps 1941-1971 , by Maj Gen Gurcharn Sandu, 1987, Vision Books Private Limited, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-7094-004-4.
Thunder over Kashmir , by Lt Col Maurice Cohen. 1955 Orient Longman Ltd. Hyderabad
Battle of Zoji La , by Brig Gen SR Hinds, Military Digest, New Delhi, 1962.