இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் அல்லது முதன்மை ஆதரவுரைஞர் (Attorney General of India) என்பவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[2] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இவருக்கு அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர். எம். சி. செடால்வத் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் பட்டியல்இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவிற்கான அரசுத் தலைமை வழக்குரைஞர் பட்டியல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia