இம்பிச்சி பாவா
ஏழு குடிக்கல் இம்பிச்சி பாவா (E. K. Imbichi Bava) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். கேரளாவின்,பொன்னானி நகராட்சியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சு) பிரிவின் தலைவராக இருந்தார். பாராளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.[1] பிறப்புஇம்பிச்சி பாவா 1917 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதி பொன்னானி ஏழுகுடிக்கலில் அப்துல்லாவுக்கு மகனாகப் பிறந்தார்.[2] [3] அரசியல் வாழ்க்கைமாணவராக இருக்கும் போதே பொது நோக்கங்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். இடதுசாரி சிந்தனைகளில் மெதுவாக ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும், பின்னர் 1940 முதல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கேரளத்தில் "தொழிலாளர் இயக்கங்கள்" மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதிலும், பின்னர் பல்வேறு இயக்கங்களிலும் பங்கு வகித்தார். 1948 இல் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸில் மலபார் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பின் (1947–1995)
குடும்பம்1956 ஆம் ஆண்டு பாத்திமாவை, இம்பச்சி பாவா மணந்தார், (முன்னாள் பொன்னானி பேரூராட்சித் தலைவர், ஆசிரியர் மற்றும் சமூகஆர்வலர்) பாவாவிற்க்கு ரசூல் சலாம், கலீல், ஜலீல் மற்றும் முஸ்தாக் என நான்கு மகன்களும், ஜீனத் என ஒரு மகளும் இருந்தனர். இறப்புபாவா 11 ஏப்ரல் 1995 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது இறந்தார், அவருக்கான மரியாதையை 24 ஏப்ரல் 1995 அன்று பேரவை செலுத்தியது.[8] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia