இரண்டாம் ஹரிஹர ராயன்
இரண்டாம் ஹரிஹர ராயன் (Harihara II, கி.பி. 1377-1404), விஜயநகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் ஒருவர். இவர் அப்பேரரசின் மூன்றாவது அரசராவார். விஜயநகரத்தின் முதல் அரச மரபான சங்கம மரபைச் சேர்ந்தவர்.[1] இவருடைய காலத்தில் வேதங்கள் பற்றிய முக்கிய பணிகள் நிறைவடைந்தன. "வைதிகமார்க ஸ்தாபனாச்சார்யா", "வேதமார்க பிரவர்தக" ஆகிய பட்டங்களைப் பெற்றார். வாழ்க்கைக் குறிப்புவிஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவரான புக்கா ராயன் 1377 இல் இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தார்.[2] 1404 இல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவருக்குப் பின்னர் விருபாட்ச ராயன் ஆட்சி அமைத்தார். அரிகர ராயனின் ஆட்சியின் போது, நெல்லூருக்கும் கலிங்கத்துக்கும் இடையில் ஆந்திராவின் கட்டுப்பாட்டிற்காக கொண்டவீடு ரெட்டிகளுக்கு எதிராகப் போராடியதன் மூலம் அவர் தனது இராச்சியத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். அரிகர ராயன் கொண்டவீடுவின் ரெட்டிகளிடமிருந்து, அத்தங்கி, சிறீசைலம் பகுதிகளையும், கிருஷ்ணா நதியின் தெற்கே உள்ள தீபகற்பத்திற்கு இடையேயான பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றினார், இது இறுதியில் தெலுங்கானாவில் இரச்சகொண்டாவின் வேலமாக்களுடன் சண்டைக்கு வழிவகுத்தது. அரிகரன் 1378 இல் முசாகித் பகுமானியின் இறப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கோவா, சாவுல், தபோல் போன்ற துறைமுகங்களைக் கட்டுப்படுத்தி, வடமேற்கு வரை தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினார். இன்று அம்பி என்று பரவலாக அறியப்படும் முன்னைய விஜயநகரை அழிபாட்டுப் பகுதியில் இரண்டாம் அரிகரனுடைய அரண்மனை என்று நம்பப்படும் கட்டிடத்தின் அழிபாடுகளையும் காணலாம்.[3] அரிகரனின் தளபதி இருகுப்பா ஒரு சைன ஆசிரியரான சிம்மானந்தியின் சீடர் ஆவார். அவர் விஜயநகரத்தில் கும்து-ஜினநாதரின் கற்கோயிலையும் கட்டினார்.[4] கொண்டவீடு ரெட்டிகளுக்கு எதிரான அவரது போரின் போது, அவர் மைசூர் ஆட்சியையும், மைசூரில் உள்ள டால்வோய்களை எதிர்த்துப் போராடும் பணியையும் யதுராயரிடம் ஒப்படைத்தார், இதன் மூலம் மற்றொரு வலிமைமிக்க எதிர்கால இராச்சியத்தின் முதல் ஆட்சியாளரை நியமித்தார். மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia