இரமேஷ் மெண்டோலா
இரமேஷ் மெண்டோலா (Ramesh Mendola) இந்தோரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியல்வாதி ஆவார் [2] 2008, 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தூர்-2 சட்டப் பேரவைத்தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். [3] 2013 தேர்தலில் இவர் 91000 வாக்குகள் வித்தியாசத்தில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். [4] 2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலிலும் மெண்டோலா மீண்டும் அதே தொகுதியிலிருந்து 71000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். [5] இவர் மத்தியப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ளார். [6] அரசியல் வாழ்க்கைஇந்தோரைச் சேர்ந்த ரமேஷ் மெண்டோலா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார்.[7] சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, மெண்டோலா இந்தோர் நகரவைக்கு பலமுறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோர் பாஜகவின் நகரத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது தொகுதியான இந்தூர்-2 இல் உள்ள உள்ளூர் கடன் கூட்டுறவு சங்கமான நந்தா நகர் சாக் சககாரி சன்ஸ்தா மரியாடிட்டின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [8] சர்ச்சைகள்இரமேஷ் மெண்டோலா தனது தொகுதியான இந்தூர்-2 இல் அமைந்துள்ள நந்தநகரில் உள்ள ஒரு பள்ளி நிலத்தில், 'சுக்னி தேவி நில மோசடியில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். [9] [10] பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவுடன் இவர் நெருக்கமாக இருந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக விவாதிகப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் ரமேஷ் மெண்டோலா மீதான குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது. " [11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia