கைலாஷ் விஜய்வர்கியா
கைலாஷ் விஜய்வர்கியா (Kailash Vijayvargiya) (பிறப்பு 13 மே 1956) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். [1] இவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தோரின் நகரத்தந்தையாகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் மத்திய தலைமைக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு 12 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். [2] விஜயவர்கியா, 2014 இல் அரியானாவுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், [3] அத்தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் கட்சி பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜூன் 2015 இல் இவர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமித் சா இவரை நியமித்தார்.[4] மேலும், மேற்கு வங்காளத்தில் பாஜகவின் புதிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். [5] தனிப்பட்ட வாழ்க்கைவிஜய்வர்கியா இந்தூரில் சங்கர்தயாள் விஜய்வர்கியாவுக்கு 1956 மே 13 அன்று பிறந்தார். இவர் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். பின்னர் இளங்கலைச் சட்டமும் படித்தார். இவர் ஆஷா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அரசியல்வாதியான ஆகாஷ் விஜய்வர்கியா உட்பட இரண்டு மகன்கள் உள்ளனர். [6] அரசியல் வாழ்க்கைவிஜயவர்கியா, 1975 இல் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் மூலம் அரசியலில் நுழைந்தார். இவர் 1983 இல் இந்தோர் நகராட்சி உறுப்பினராகவும், 1985 இல் நிலைக்குழு உறுப்பினராகவும் ஆனார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் மாநிலச் செயலாளராகவும், மாநில பாஜக சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். 1985 இல் வித்யார்த்தி பரிசத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், 1992 இல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநிலத் துணைத் தலைவராகவும், அதன் தேசிய பொதுச் செயலாளராகவும், 1993 இல் குசராத்தின் தலைவராகவும் ஆனார். விஜய்வர்கியா 1990, 1993, 1998, 2003, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். அக்கட்சி 2014இல் நடந்த அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து 4 லிருந்து 47 இடங்களாகப் பிடித்தது. [8] இந்த வெற்றியின் மூலம் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், 2015 இல் மேற்கு வங்காளத்திற்கான கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் [9] [10] 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 100 செல்வாக்கு மிக்க நபர் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்டார் [11] 2019 மக்களவைத் தேர்தலில் கட்சி 18 இடங்களை வென்றதால் இவர் மேற்கு வங்காளத்தில் பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்டார். [12] நகரத்தந்தைவிஜய்வர்கியா 2000 ஆம் ஆண்டில் இந்தோர் மாநகராட்சிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகரத்தந்தை ஆனார். இவர் 2003 இல் தெற்காசிய நகரத்தந்தை அமைப்பின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். மேலும் டர்பனில் நடந்த உலக பூமி உச்சி மாநாட்டில் இந்திய தன்னார்வ அமைப்பின் குழுவை வழிநடத்தினார். [7] விஜய்வர்கியா 8 டிசம்பர் 2008 அன்று மத்தியப் பிரதேச அரசில் பொதுப்பணிகள், நாடாளுமன்ற விவகாரங்கள், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அமைச்சராகப் பதவியேற்றார். இவருக்கு 1 ஜூலை 2004 அன்று மத அறக்கட்டளைகள், நன்கொடை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றின் துறை வழங்கப்பட்டது. விஜய்வர்கியா மீண்டும் பாபுலால் கௌரின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆகஸ்ட் 27, 2004 இல் இணைந்தார். இவர் 4 டிசம்பர் 2005 அன்று சிவராஜ் சிங் சௌகானின் அமைச்சரவையில் பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக மீண்டும் சேர்க்கப்பட்டார். [6] சிவராஜ் சிங் சௌகானின் (2008 தேர்தலுக்குப் பிந்தைய தேர்தல்) இரண்டாவது அமைச்சரவையில், விஜய்வர்கியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளை வகித்தார். மூன்றாவது அமைச்சரவையில் (2013 தேர்தலுக்குப் பின்), விஜய்வர்கியா நகர்ப்புற மேம்பாட்டுத் துறையை வகித்தார். [13] [14] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia