இராஜேந்திரலால் மித்ரா
இராஜா இராஜேந்திரலால் மித்ரா (Raja Rajendralal Mitra) (1822 பிப்ரவரி 16 - 1891 சூலை 26) இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நவீன இந்தியவியலாளரும் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த முதல் அறிவியல் வரலாற்றாசிரியருமாவார். மேலும் இவர் பல்துறை வித்தகராகவும் இருந்துள்ளார். இவர் பெங்காலி மறுமலர்ச்சியின் முன்னோடி நபராக இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கைஇராஜேந்திரலால் மித்ரா 1822 பிப்ரவரி 16 அன்று கிழக்கு கொல்கத்தாவில் சூரா என்ற இடத்தில் (இப்போது பெலியகட்டா) ஜனமேஜய மித்ரா என்பவருக்கு ஆறு மகன்களில் மூன்றாவதாக பிறந்தார். [1] [2] , இவருக்கு ஒரு சகோதரியும் இருந்தார். [3] இராஜேந்திரலாலை, குழந்தைகள் இல்லாத இவரது அத்தை வளர்த்தார். [4] மித்ராவின் குடும்பம் அதன் தோற்றத்தை பண்டைய வங்காளத்திலிருந்தே கண்டறிந்தது; [2] மேலும் இராஜேந்திரலால் ஆதிசுரா புராணத்தின் விசுவாமித்ரரிடமிருந்து வந்ததாகத் தெரிகிறது. [5] குடும்பம் குலின் கயஸ்தா சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். [2] மேலும் இவர்கள் பக்தியுள்ள வைஷ்ணவர்கள். [6] இராஜேந்திரலாலின் 4 வது தாத்தா இராமசந்திரன் என்பவர் மூர்சிதாபாத் நவாப்களின் திவானாக இருந்துள்ளார். [2] இவரது தாத்தா பீதாம்பர மித்ரா அயோத்தி மற்றும் தில்லி அரசசபையில் முக்கியமான பதவிகளை வகித்தார். [1] [7] ஜனமேஜயர் ஒரு பிரபலமான கிழகத்திய அறிஞர் ஆவார், அவர் பிரம்ம வட்டாரங்களில் மதிக்கப்படுபவர் மற்றும் வேதியியல் கற்ற முதல் வங்காளியாக இருக்கலாம்; அவர் பதினெட்டு புராணங்களின் உள்ளடக்கத்தின் விரிவான பட்டியலையும் தயாரித்திருந்தார். [3] ஜமாபுகூரைச் சேர்ந்த இராஜா திகம்பர் மித்ராவும் குடும்பத்தின் உறவினர். இவரது தாத்தாவின் செலவினம் மற்றும் இவரது தந்தை செய்த பணிக்காக ஊதியம் பெற மறுத்ததன் காரணமாக, இராஜேந்திரலால் தனது குழந்தை பருவத்தை வறுமையில் கழித்தார். [7] கல்விஇராஜேந்திரலால் மித்ரா தனது ஆரம்பக் கல்வியை வங்காளத்தில் உள்ள ஒரு கிராமப்புறப் பள்ளியில் பெற்றார், [4] அதைத் தொடர்ந்து பாதுரியகட்டாவில் ஒரு தனியார் ஆங்கில-நடுத்தரப் பள்ளியில் படித்தார். [4] தனது 10 ஆவது வயதில், கொல்கத்தாவில் உள்ள இந்துப் பள்ளியில் பயின்றார். [8] இந்த இடத்திலிருந்து மித்ராவின் கல்வி பெருகிய முறையில் பரவலாக மாறியது; 1837 திசம்பரில் இவர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்- அங்கு இவர் சிறப்பாகச் செயல்பட்டார்- ஒரு சர்ச்சையில் சிக்கிய பின்னர் 1841இல் இவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [9] பின்னர் இவர் சிறுகாலம் சட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். [10] பின்னர் கிரேக்கம், லத்தீன், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளைப் படிப்பதற்கு மாறினார். இது இவரது வரலாற்றாய்வின் ஆர்வத்திற்கு வழிவகுத்தது . [11] [9] திருமணங்கள்1839 ஆம் ஆண்டில், இவருக்கு 17 வயதாக இருந்தபோது, சவுதாமினி என்பவரை மணந்தார். [8] இவரது மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தவுடன் இறந்து போனார். [12] இவரது மகளும் தாய் இறந்த சில வாரங்களுக்குள் இறந்துவிட்டாள். [12] மித்ராவின் இரண்டாவது திருமணம் புவனமோகினி என்பவருடன் இருந்தது இவர்களுக்கு இராமேந்திரலால், மகேந்திரலால் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். [13] ஆசியச் சமூகம்1846 ஏப்ரலில் மித்ரா ஆசியச் சங்கத்தின் நூலகர்- மற்றும் - உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். [9] இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். 1856 பிப்ரவரியில் இவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இயக்குநர் குழுவுக்கு நியமிக்கப்பட்டார். இவர் மூன்று சந்தர்ப்பங்களில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1885 ஆம் ஆண்டில் மித்ரா ஆசியச் சங்கத்தின் முதல் இந்தியத் தலைவரானார். [14] [15] [9] [9] மித்ரா வரலாற்றில் முறையான பயிற்சியினைப் பெற்றிருந்தாலும், ஆசியச் சங்கத்துடனான இவரது பணி இவரை இந்திய வரலாற்றியலில் வரலாற்று முறையின் முன்னணி நிபுணராக நிறுவ உதவியது. [14] [9] மித்ரா ஒரு உள்ளூர் வரலாற்று சமுதாயமான இராஜசாகியின் பரேந்திர ஆராய்ச்சி சங்கத்துடன் தொடர்புடையவர். தாக்கங்கள் மற்றும் முறைஆசியச் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில், இராஜேந்திரலால் பல குறிப்பிடத்தக்க நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். [16] மேலும் கீழைநாடுகளின் அறிவுஜீவித்துவத்தின் இரண்டு சிந்தனை நீரோடைகளால் ஈர்க்கப்பட்டார். பிரபல அறிஞர்கள் வில்லியம் ஜோன்ஸ் (ஆசியச் சங்கத்தின் நிறுவனர்) மற்றும் எச்.டி. கோல்ப்ரூக் ஆகியோரின் உலகளாவியவாதக் கோட்பாட்டை முன்வைத்து, அரசியல் நிகழ்வுகளை விட கலாச்சார மாற்றங்கள் மூலம் வரலாற்றை நாள்பட்டதன் மூலம் வெவ்வேறு இனங்களைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள முயன்றார். [14] இந்திய-ஆரியர்களின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய ஒரு கீழைநாட்டு விவரணையை எழுத ஒப்பீட்டு மொழியியல் மற்றும் ஒப்பீட்டு புராணங்களின் கருவிகளைப் பயன்படுத்தினார். [17] [18] கீழைநாட்டு தத்துவங்களுக்கு மித்ரா பங்களித்த போதிலும், இவர் கடந்த காலத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், மரபுகளைத் தவிர்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக் கொண்டார். [14] வரலாற்றியல்மித்ரா ஒரு புகழ்பெற்ற பழங்கால மற்றும் வரலாற்று கல்வெட்டுகள், நாணயங்கள் மற்றும் நூல்களைக் கண்டுபிடிப்பதில் மற்றும் புரிந்துகொள்வதில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தார். [19] [9] சாலிவாகன சகாப்தத்திற்கும் கிரரெகொரியன் நாட்காட்டிக்கும் இடையிலான தொடர்பை இவர் நிறுவினார். இதனால் கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டை அடையாளம் காட்டினார். [9] மேலும் இடைக்கால வங்காள வரலாற்றின் துல்லியமான புனரமைப்புக்கு பங்களித்தார். குறிப்பாக பாலா மற்றும் சென் வம்சங்கள், வரலாற்றுச் சட்டங்களை புரிந்துகொள்வதன் மூலம். [20] [9] இவர் குவாலரியன் நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் படித்தார். பல அறியப்படாத மன்னர்களையும் தலைவர்களையும் கண்டுபிடித்தார். மேலும் அவர்களுக்கு தோராயமான கால இடைவெளிகளை ஒதுக்கினார். தோரமணனின் ஆட்சிக்கு ஒரு துல்லியமான காலக்கெடுவை வழங்கிய இவரது சமகாலத்தவர்களில் ஒரே வரலாற்றாசிரியர் ஆவார். [9] அன்றைய பெரும்பாலான இந்திய-வரலாற்றாசிரியர்களுக்கு மாறாக, சுருக்கமான பகுத்தறிவு மீதான வெறுப்புடன், உண்மை அவதானிப்புகள் மற்றும் அனுமானங்களுக்கான மித்ராவின் தொடர்பு சாதகமாகப் பெறப்பட்டது [14] பட்டியல், மொழிபெயர்ப்பு மற்றும் வர்ணனைஆசியச் சங்கத்தின் நூலகராக, சங்கத்தின் பண்டிதர்களால் சேகரிக்கப்பட்ட இந்தியக் கையெழுத்துப் பிரதிகளை பட்டியலிட்டதாக இராஜேந்திரலால் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர், பல அறிஞர்களுடன் சேர்ந்து, ஐரோப்பிய மறுமலர்ச்சியின் மைய கருப்பொருளைப் பின்பற்றினார். இது பண்டைய நூல்களின் தொகுப்பை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து அவை மொழியியல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பலவிதமான இந்திய நூல்கள், விரிவான வர்ணனைகளுடன், குறிப்பாக பிப்லியோதெக்கா இண்டிகாவில் வெளியிடப்பட்டன. [9] மேலும் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. [21] [9] பண்டிதர்களுக்கு சொற்களை நகலெடுக்கவும், வரியா லெக்டியோ (வெவ்வேறு வாசிப்புகள்) என்ற கருத்தை பின்பற்றவும் மித்ராவின் அறிவுறுத்தல்கள் சாதகமாக விமர்சிக்கப்பட்டுள்ளன. [9] அபூர்வமான காரணிகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் கையாள்வதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில காப்பகவாதிகளில் மித்ராவும் ஒருவர். [22] தொல்லியல்![]() வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஆரியக் கட்டிடக்கலை வளர்ச்சியை ஆவணப்படுத்துவதில் மித்ரா குறிப்பிடத்தக்க பணிகளை செய்தார். பிரிட்டிசு ஓவியச் சங்கம் மற்றும் காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவின் கீழ், மித்ரா 1868-1869 ஆம் ஆண்டுகளில் ஒடிசாவின் புவனேசுவரப் பகுதிக்கு இந்திய சிற்பங்களை ஆய்வு செய்வதற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். [23] [24] இதன் முடிவில் ஒடிசாவின் தொபொருட்கள் தொகுக்கப்பட்டன. இது ஒடியாவின் கட்டிடக்கலை பற்றிய ஒரு பெரிய படைப்பாக மதிக்கப்படுகிறது. [25] [9] இந்த படைப்பு ஏன்சியன்ட் எஜிப்ட்டியன்ஸ் என்ற பெயரில் ஜான் கார்ட்னர் வில்கின்சன் என்பவர் வடிவமைத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது; இது அவரது சொந்த அவதானிப்புகளைக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து சமூக-கலாச்சார வரலாறு மற்றும் கட்டடக்கலை சித்தரிப்புகளின் புனரமைப்பும் இருந்தது. [9] [9] மகாபோதிக் கோயிலின் அகழ்வாராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பில் அலெக்சாண்டர் கன்னிங்காமுடன் மித்ராவும் முக்கிய பங்கு வகித்தனர். [26] இவரது மற்றொரு முக்கிய படைப்புகளில் புத்த கயா: சாக்ய மணியின் ஹெர்மிடேஜ், இது புத்தகயை பற்றிய பல்வேறு அறிஞர்களின் அவதானிப்புகள் மற்றும் வர்ணனைகளை தொகுத்தது. [9] இந்த படைப்புகள், இவரது பிற கட்டுரைகளுடன், இந்தியா முழுவதும் பல்வேறு வகையான கோயில் கட்டிடக்கலை பற்றிய விரிவான ஆய்வுக்கு பங்களித்தன. [9] பண்டைய இந்திய சமூக வாழ்க்கையில் அறநெறி இல்லாததால் இந்திய கோயில்களில் நிர்வாண சிற்பங்கள் இருப்பதாகக் கூறிய இவரது ஐரோப்பிய சகாக்களைப் போலல்லாமல், மித்ரா அதற்கான காரணங்களை சரியாகக் எடுத்துரைத்தார். [27] இந்தியாவின் கட்டடக்கலை வடிவங்கள், குறிப்பாக கல் கட்டிடங்கள் கிரேக்கர்களிடமிருந்து பெறப்பட்டவை என்றும், ஆரிய நாகரிகத்தில் குறிப்பிடத்தக்க கட்டடக்கலை முன்னேற்றம் இல்லை என்றும் நடைமுறையில் உள்ள ஐரோப்பிய அறிஞர்களின் கருத்தை மறுப்பதுதான் ராஜேந்திரலாலின் தொல்பொருள் நூல்களின் நிலையான கருப்பொருள் ஆகும். [9] [14] [28] இசுலாமியருக்கு முந்தைய இந்தியாவின் கட்டிடக்கலை கிரேக்க கட்டிடக்கலைக்கு சமமானது என்று இவர் அடிக்கடி குறிப்பிட்டார். அதே அறிவுசார் திறனைக் கொண்ட கிரேக்கர்கள் மற்றும் ஆரியர்களின் இன ஒற்றுமையை முன்மொழிந்தார். [9] இந்த விஷயத்தில் மித்ரா பெரும்பாலும் ஐரோப்பிய அறிஞர்களுடன் முரண்பட்டார்; ஜேம்ஸ் பெர்குசனுடனான இவரது கடுமையான சர்ச்சை [9] பல வரலாற்றாசிரியர்களை ஆர்வமாகக் கொண்டுள்ளது. [29] பெர்குசன் பாபு 'ராஜேந்திரலால் மித்ராவின் பணிக்கு சிறப்பு குறிப்புடன் இந்தியாவில் தொல்லியல் என்ற புத்தகத்தை எழுதினார் [9] மித்ராவின் பல தொல்பொருள் அவதானிப்புகள் மற்றும் அனுமானங்கள் பின்னர் சரி செய்யப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன. [9] இவரது படைப்புகள் பெரும்பாலும் இவரது ஐரோப்பிய சகாக்களின் படைப்புகளை விட கணிசமாக சிறப்பாக இருந்தன. [9] கடைசி ஆண்டுகள் மற்றும் இறப்பு'ராஜேந்திரலால் மித்ரா தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை மணிக்தலா என்ற நிறுவனத்தில் கழித்தார். [30] இவரது கடைசி நாட்களில் கூட, இவர் ஆசியக் குழுவுடன் விரிவாக ஈடுபட்டார். மேலும் பல துணைக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். 1891 சூலை 26 அன்று கடுமையான காய்ச்சலால் மித்ரா தனது வீட்டில் இறந்தார். [31] மரியாதை1863 ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகம் மித்ராவை சக ஊழியராக கௌரவித்தது. அங்கு இவர் அதன் கல்வி சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்தார். [32] மேலும் 1876 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் மித்ராவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. 1864 ஆம் ஆண்டில், ஜெர்மன் கீழைநாட்டுச் சங்கம் இவரை ஒரு சக ஊழியராக நியமித்தது. [33] 1865 ஆம் ஆண்டில், [அங்கேரி|அங்கேரியின்]] அறிவியல் கழகம், மித்ராவை ஒரு வெளிநாட்டு சக ஊழியராக நியமித்தது. 1865 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஆசியச் சங்கம் இவரை ஒரு கெளரவ சக ஊழியராக நியமித்தது. [33] அக்டோபர் 1867 இல், அமெரிக்கக் கீழைநாட்டுச் சங்கம் இவரை ஒரு கெளரவ சக ஊழியராக நியமித்தது. [33] 1877 ஆம் ஆண்டில் ராவ் பகதூர் என்ற கௌரவப் பட்டம் மித்ராவுக்கு வழங்கப்பட்டது. 1888 இல் பிரிட்டிசு அரசாங்கத்தால் 'இராஜா பட்டம் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் குறித்து மித்ரா அதிருப்தி தெரிவித்திருந்தார். [9] குறிப்புகள்
முக்கிய ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia