வங்காள மறுமலர்ச்சி (Bengal renaissance), (Bengali: বাংলার নবজাগরণ; Bāṅlār nabajāgaraṇ; பா³ங்லார் நப³ஜாக³ரண்) பிரித்தானிய இந்தியாவின்வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் (1772–1833), வங்காளச் சமூகத்தில் உடன்கட்டை ஏறல், விதவைத் திருமணம் போன்ற சமூகத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம், வங்காளத்தில் மறுமலர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். 20-ஆம் நூற்றாண்டில் இதனை இரவீந்திரநாத் தாகூர் (1861–1941) முடித்து வைத்தார்.
சத்யஜித் ராய் (1921-1992) போன்றவர்கள் திரைப்படத்துறையில் புதுமையைப் புகுத்தினார்கள். [1] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சமய, சமூக சீர்திருத்தவாதிகள், பல்துறை அறிஞர்கள், இலக்கிய அறிவாளர்கள், இதழாளர்கள், நாட்டுப் பற்று பேச்சாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இணைந்து வங்காள மறுமலர்ச்சியை துவக்கி வைத்தனர். [2]
பின்னணி
பிரித்தானிய இந்தியாவின் குடிமைப்பட்ட வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் பெண்கள், திருமணம், வரதட்சணை, உடன்கட்டை ஏறல், சாதிய அமைப்பு மற்றும் சமயம் தொடர்பாக ஆத்திகர்களிடம் பல கேள்விகள் எழுப்பினர். 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹென்றி லூயிஸ் விவியன்[3] எனும் பிரித்தானிய இளைஞர் தலைமையில், பகுத்தறிவு மற்றும் நாத்திக எண்ணம் படைத்த வங்காள இளைஞர்கள் இளய வங்காளம் (Young Bengal) எனும் சமூக சீர்திருத்த இயக்கத்தை நிறுவினர்.
பிரம்ம சமாஜம் நிறுவிய முன்னோடிகளில் ஒருவர் கேசவ சந்திர சென்
வங்காள வரலாற்று அறிஞரான ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்:[8]
வங்காளத்தைஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், சமயம் மற்றும் சமூக எண்ணங்கள் மற்றும் கருத்துக்களில் அதிக புரட்சியை தூண்டியது ... கடவுளர்கள் மற்றும் தேவதைகள், அரசர்கள் மற்றும் ராணிகள் மற்றும் இளவரசர்கள் கதைகளிலிருந்து, வாழ்க்கையின் எளிய நடத்தை முறைகளைக கற்றுக் கொள்ளவேண்டும். மேலும் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்... ஒவ்வொரு புரட்சியிலும் மக்கள் வீரியத்துடன் கலந்து கொள்வது என்பது தற்போதைய ஆங்கிலேயர் ஆட்சி விதிவிலக்கு அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் வங்காள இலக்கிய இலக்கியத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் வரிசையில இராசாராம் மோகன் ராய், அட்சய குமார் தத், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தோரு தத், மைக்கேல் மதுசூதன் தத், ஹேம சந்திரா பானர்ஜி, ரமேஷ் சந்திர மஜும்தார், சத்யஜித் ராய் மற்றும் தீன பந்து மித்ரா உள்ளனர். தற்போதைய 20ம் நூற்றாண்டில், 1975 வரையிலான கால கட்டத்தில் வங்காள இலக்கியத்தில் முதல் முறையாக உரைநடை, வெற்று உரை, வரலாற்று புனைவுகள் மற்றும் நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன ...
↑Cultural Heritage of Bengal by R. C. Dutt, quoted by Nitish Sengupta, pp 211-212.
மேலும் படிக்க
Chatterjee, Pranab (2010). A Story of Ambivalent Modernization in Bangladesh and West Bengal: The Rise and Fall of Bengali Elitism in South Asia. Peter Lang. ISBN9781433108204.
Dasgupta, Subrata (2005). Twilight of the Bengal renaissance: R.K. Dasgupta & his quest for a world mind. the University of California: Dey's Publishing.
Dasgupta, Subrata (2009). The Bengal Renaissance. Permanent Black. ISBN978-8178242798.
Dasgupta, Subrata (2011). Awakening: The Story of the Bengal Renaissance. Random House India. ISBN978-8184001839.
Fraser, Bashabi edited Special Issue on Rabindranath Tagore, Literary Compass, Wiley Publications. Volume 12, Issue 5, May 2015. See Fraser's Introduction pp. 161-72.
Pal, Bipin Chandra; Cakrabartī, Jagannātha (1977). Studies in the Bengal renaissance. the University of California: National Council of Education, Bengal.
Sastri, Sivanath. A History of the Renaissance in Bengal: Ramtanu Lahiri, Brahman and Reformer, London: Swan, Sonnenschein (1903); Kolkata: Renaissance (2002).
Sastri, Sibnath (2008). Ramtanu Lahiri, Brahman and Reformer: A History of the Renaissance in Bengal. BiblioLife. ISBN978-0559841064.
Sen, Amit (2011). Notes on the Bengal Renaissance. Nabu Press. ISBN978-1179501390.