இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (R. G. Kar Medical College and Hospital , RGKMCH) மேற்கு வங்காள மாநிலத்தில்கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆசியாவின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும்.[3][4][5] இது குடியேற்றக்கால இந்தியாவில் மருத்துவக் கல்வியிலும் சேவைகளிலும் தன்னிறைவு பெறுவதற்காக 1886ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1916 முதல் 2003 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது; 2003ஆம் ஆண்டிலிருந்து அவ்வாண்டு நிறுவப்பட்டமேற்கு வங்க உடல்நலஞ்சார் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[6][7] இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற இருபாலருக்குமான நிறுவனமாகும்.
வரலாறு
1886இல் கொல்கத்தா மருத்துவப் பள்ளியாக உருப்பெற்ற காலத்தில் இக்கல்லூரிக்கு உடனாய மருத்துவக்கல்லூரி இல்லாதிருந்தது. தற்போதைய பாக்கித்தானின்இலாகூரின் மாயோ மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டிருந்தது.[6] 1902ஆம் ஆண்டு பள்ளி வளாகத்துடன் இணைந்த மருத்துவமனையுடனான தனக்கான கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வங்காள மருத்துவர்கள் மற்றும் அறுவை மருத்துவர்களுக்கான தேசிய கல்லூரியுடன் இணைந்தது. மேலும் வளர்ச்சி பெற்று பெல்காச்சியா மருத்துவக்கல்லூரி என்ற பெயருடன் 1916இல் இயங்கி வந்தது.[6][8] 1918 முதல் 1948 வரை அப்போதைய வங்காள ஆளுநர் கார்மைக்கேலை பெருமைப்படுத்தும் விதமாக இக்கல்லூரி கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதன் உருவாக்கத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த மருத்துவர் இராதா கோபிந்த கர் நினைவாக இந்திய விடுதலைக்குப் பிறகு மே 12, 1948 அன்று தற்போதைய பெயர் சூட்டப்பட்டது.[6][9][10][11] மே 1958 முதல் இக்கல்லூரி மேற்கு வங்க அரசின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.[6]
2024 வன்கலவியும் கொலையும்
ஆகத்து 9, 2024 அன்று [12][13] கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமேற்படிப்பு பயிற்சி மருத்துவரின் உயிரற்ற உடல்[14] கல்லூரியின் கருத்தரங்க அறையில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பிணக் கூறாய்வில் அப்பெண் மருத்துவர் வன்கலவி செய்யப்பட்டு கொலையுண்டது அறியப்பட்டது. இந்நிகழ்வு நாடளாவிய பரவலான போராட்டங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.[13]
ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும்
↑Directory of Medical Colleges in India. Central Bureau of Health Intelligence, Directorate General of Health Services, Ministry of Health & Family Welfare, Government of India. 1976. p. 282. Archived from the original on 15 August 2024. Retrieved 5 October 2016. Dr. Suresh Prasad Sarbaddhikari