இரும்புத்திரை (திரைப்படம்)
இரும்புத்திரை (Irumbu Thirai) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] நடிகர்கள்
தயாரிப்பு விபரம்1959 ஆம் ஆண்டில் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படத்துக்கு பைகாம் (Paigham) எனப் பெயரிப்பட்டது. தமிழ்ப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைப் பரிசீலித்து இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஒரு விருந்து வைத்ததுடன் பெயரை முன்மொழிந்த பையனுக்கு பரிசாக ஒரு தொகையும் அளித்தார் வாசன். நிஜ வாழ்வில் தாயும் மகளுமான வசுந்தரா தேவியும் வைஜெயந்திமாலாவும் இந்தப் படத்திலும் தாயும் மகளுமாக நடித்துள்ளார்கள். பாடல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia