திருச்சி லோகநாதன்
திருச்சி லோகநாதன் (Thiruchi Loganathan; 24 சூலை 1924 - 17 நவம்பர் 1989) தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர். வாழ்க்கைச் சுருக்கம்திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும். நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடலை நிழல்கள் திரைப்படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். திரைப்படங்களில்இவர் பாடிய முதல் திரைப்பட பாடல் காசினிலே நாங்கள் வாழ்வதே எனத் தொடங்கும் பாடல், 1947 இல் எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் கே. வி. ஜானகியோடு இணைந்து பாடினார். தொடர்ந்து கஞ்சனில் பிச்சைக்காரன் ஆனேன், அத்தை மகளே நில்லாய், நீலவான் நிலவே ஆகிய பாடல்களையும், அபிமன்யுவில் சகாதேவனாக நடித்தும் இருக்கிறார். திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்
குறிப்பிடத்தகுந்த இரண்டு நிகழ்வுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia