இலங்கையின் கொலைக்களம்
இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய ஒர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இதனை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 சூன் 14, 2011 அன்று பொதுவில் ஒளிபரப்பியது. இலங்கையில் இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள், மீறல்கள் நடந்தற்கு ஒரு முக்கிய சாட்சியாக இது கருதப்படுகிறது.[1]. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் நாள் சேனல் 4 வெளியிட்டது. ஐ.நா மனித உரிமைகள் அவையில் ஒளிபரப்புஇலங்கையின் படுகொலைக்களம் பொதுவில் ஒளிபரப்பப்படும் முன்பு, இது ஐ.நா மனித உரிமைகள் அவையில் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுதலால் சூன் 3 அன்று காண்பிக்கப்பட்டது.[2] தாக்கம்இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு, இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.[3] தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" 2012, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன[4]. இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia