தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாடு இலங்கையில் இல்லாது போனது
இலங்கை அரசாங்கம் நாட்டின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்
நிலப்பகுதி மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் 2002 - 2008 வரையான காலப்பகுதியில் வடக்கில் பெரும் பகுதியையும் கிழக்கில் அரைவாசிப் பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 2009 மேயில் முழுப்பகுதியும் அரச கட்டுப்பாட்டிற்கு வந்தது.
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் (Sri Lankan Civil War) என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத்தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.[1]
27 ஆண்டுகளுக்கு மேலாக இப்போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.[14] போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர். இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[15]
இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.[16] ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.[17][18]
2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[19] இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி,[20] தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர்.[21] இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.
தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் அரச மொழிகள்; ஆங்கிலம் இணைப்பு மொழி (13th Amedment, 14th November, 1987 [2]). நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அனேக அரச சேவைகளை தமிழில் பெறுவது அரிது. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. Sri Lanka's 'Tamil implementation'
இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. நடைமுறையில் பிற சமயத்தவர் தமது சமயத்தை பின்பற்றுவதில், பாதுகாப்பதில், மேம்படுத்துவதில் எந்தவித தடை இல்லையென்றாலும், இது சமமற்ற உரிமை பெற்ற குடியுருமை என்ற தோற்றப்பாட்டையும் அதன் அரசியல்-சட்ட வடிவகத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மேலும் சமயமும் அரசும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது சற்றும் பொருட்படுத்தவில்லை.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும் தொகை தகுதி திறமை பெற்ற தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை இந்த சட்டம் இல்லாமல் செய்தது. இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.
இலங்கையில் 14.11.2013 அன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டைத் தொடர்ந்து [22] 1983ம் ஆண்டு துவங்கி மே மாதம் 2009ம் ஆண்டு வரையில் 30 ஆண்டுகாலம் நடந்த போரில் உயிர் இழப்பு, உடல் ஊனம், காணாமல் போனவர்களின் பட்டியல் போன்ற கணக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க முதன் முறையாக இலங்கை அரசு ஒத்துக்கொண்டது.[23]