ஈழப்போரில் இந்தியாவின் பங்கு
ஈழப்போரில் இந்தியா பல கால கட்டங்களில் பல்வேறு வியூகங்களுடன் பங்கெடுத்துள்ளது. இந்திய நடுவண் அரசின் நலங்களைப் பேணுவதற்காக தானாகவும், தமிழர் தரப்பு அல்லது அரச தரப்புக் கோரியமையாலும் ஈழப் போரில் பங்கெடுத்துள்ளது. ஈழ இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கி இந்தியா, ஈழப் போராட்டத்தை ஆயுதப் போர் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் ஈழத்தில் ஆயுதக் குழுக்களை அழிக்க உதவியது இந்தியா, ஈழத்தமிழர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது, கண்டித்தது ஈழத்து அகதிகளில் பெருந்தொகையினரை ஏற்றுக் கொண்டது, ஈழத்தில் அமைதிப் படை என்னும் பெயரில் இந்தியப் படையை அனுப்பியது,[3] அமைதிப் படை ஈழப் போராளிகளுக்கு எதிராகப் போரிட்டது, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டது,[3] ஈழப் போரின் பின்பான செயற்பாடுகள் என பல்வேறு வழிகளில் இந்திய அரசு ஈழப்போரிலும் ஈழப்போராட்டத்திலும் பங்கெடுத்து வருகிறது. ஈழப்போரில் இந்தியா: 1987–1990ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு இலங்கையில் அமைதி காக்கும் பணியில் அமர்த்த இந்திய அமைதி காக்கும் படை அனுப்பியதால் ஏற்பட்ட போர் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறிக்கும். இலங்கை ஆயுதப் படைகளுக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் (குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்) இடையே நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர 1987 ஆம் ஆண்டில் நடந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை[3]பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia