இலங்கை முரண்பாடுகளில் இந்திய அமைதி காக்கும் படை பங்கு இலங்கையிலும் இந்தியாவிலும் விமர்சிக்கப்பட்டது. இது பல மனித உரிமை மீறல்களை நடத்தியது. இதில் பாலியல் பலாத்காரங்கள், பொதுமக்கள் படுகொலைகள் ஆகியன உள்ளடங்கும். பல நடுநிலை அமைப்புகள் இந்திய இராணுவம் குடிமக்களின் பாதுகாப்பில் குறைந்த அக்கறையுடன் செயல்பட்டதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. இது இலங்கை, இந்தியாவிற்குள்ளும், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்திய அமைதி காக்கும் படை ஒரு ஆக்கிரமிப்பு, அடக்குமுறை படையாக கருதப்பட்ட, கணிசமான கூக்குரலுக்கும் பொதுமக்களின் அதிருப்திக்கும் வழிவகுத்தது.
இந்தியப் படைகள் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் இருந்த காலத்தில் ஏராளமான பொதுமக்கள் படுகொலைகள், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல்ள், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.[1][2] யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1989 ஆகஸ்ட் 2, 3, 4 ஆகிய தேதிகளில் இந்திய அமைதிப்படையினரால் 50 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட, வல்வெட்டித்துறை படுகொலை போன்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தமையும் இதில் அடங்கும். மேலும் 100 இற்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பிற சொத்துக்களும் எரித்து அழிக்கப்பட்டன.[3]
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் படுகொலையானது மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் ஆகும். வைத்தியசாலைக்கு அருகில் தமிழ் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் விரைவாக வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து 70 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தனர். இந்த பொதுமக்களில் நோயாளிகள், சீருடையில் இருந்த இரண்டு மருத்துவர்கள், மூன்று தாதிகள், ஒரு குழந்தை மருத்துவ ஆலோசகர் அடங்குவர். இப்படுகொலைக்குப் பிறகு மருத்துவமனை முழுமையாக மீளவில்லை.[4][5][6]
இந்திய அமைதி காக்கும் படை சிங்கள குடிமக்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரிந்த மதராசுப் படையணி உடந்தையாக இருப்பதாக அப்போதைய இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரிகள் பொறுப்பை மறுத்தாலும், அவர்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மதராசுப் படையணியை விலக்கிக் கொண்டனர்.[7]
பாலியல் வன்முறை
1987 அக்டோபரில் இருந்து, விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவதற்காக இந்திய அமைதி காக்கும் படை மீது போரைத் தொடங்கியது. இந்த மோதலின் போது, இந்திய அமைதி காக்கும் படை ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது.[8] இந்திய அமைதி காக்கும் படைஅதிகாரி ஒருவர் இந்த பாலியல் வன்புணர்வுக்கு விளக்கம் அளித்தார்: "வன்புணர்வு ஒரு கொடூரமான குற்றம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் அன்புக்குரியவர்களே, எல்லாப் போர்களிலும் அவை உள்ளன. போர்ச் சோர்வு போன்ற உளவியல் காரணங்களால் அவை இடம்பெறுகின்றன."[9]
1987
தங்கள் தோழர்களை இழந்ததற்கு பழிவாங்க, 6 நவம்பர் 1987 அன்று சுமார் 7:30 மணியளவில் இந்திய அமைதி காக்கும் படை யாழ்ப்பாணத்தில் தமிழ் குடிமக்களை படுகொலை செய்தது. ஒரு சாட்சி தனது இரண்டு மகள்களையும் இந்தி பேசும் வீரர்களால் இடுப்புக்குக் கீழே நிர்வாணமாக்கியதைக் கண்டார். சிறுமிகள் இருவரும் அழுது புலம்பினர். பின்னர் இராணுவ வீரர்கள் அவர்களின் கால்களை பிரித்து, துப்பாக்கி குழாயை தொடைகளுக்கு இடையில் வைத்து, அவர்களின் பிறப்புறுப்பு வழியாக சுட்டனர். மற்றொரு ஆணின் இரண்டு மகள்களும் பிறப்புறுப்பு வழியாக சுடப்பட்டதையும் அவர் கேள்விப்பட்டுள்ளார். இந்த படுகொலையின் போது மொத்தமாக 10 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் பச்சிளம் குழந்தைகளும் அடங்கும்.[10]
1987 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் காலை 8 மணியளவில், மூன்று இந்திய அமைதி காக்கும் படையினர், 30 வயதிற்கு இடைப்பட்ட ஒரு தமிழ்த் தாயை அவரது சொந்த வீட்டிலேயே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். அப்போது அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். மேலும் பெண்ணின் தங்க நகைகளையும் திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பயங்கரக் கனவுகளால் அவதிப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.[9]
ஒரு காலத்தில் புலிகள் முகாமாக இருந்த வீட்டில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இந்திய அமைதி காக்கும் படை பாலியல் பலாத்காரம் செய்தது.[9]
1987 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, இரண்டு இந்தியப்படையினர் ஒரு இளம் தமிழ்ப் பெண்ணை,பெற்றோரிடம் இருந்து பிரித்து, அவரது வீட்டில் வன்புணர்வுக்குட்படுத்தினர். இதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டு, பின்னர் விரக்தியில் கிணற்றில் குதித்தாள்.[9]
1987 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி, பிற்பகல் 2-3 மணிக்கு இடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழை கத்தோலிக்கப் பகுதியில் ஒரு விதவை (55) மற்றும் 22 வயதுப் பெண்ணை இரண்டு இந்தியப்படையினர் வன்புணர்வுக்குட்படுத்தினர். பலாத்காரத்திற்கு ஆளான இளம் பெண், தன்னை விடுவித்துக் கொண்டு அலறியடித்துக்கொண்டு சாலையில் ஓடினாள். "என்னைக் கெடுத்துவிட்டார்கள்" என்று அவள் அழுதாள்.[9]
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, இடைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தியதற்காக 14 சீக்கிய காலாட்படையைச் சேர்ந்த சிப்பாய் கர்னைல் சிங் பணிநீக்கம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனையை எதிர்கொண்டார். 24 டிசம்பர் 1987 அன்று கொடிகாமம் அருகே திருமணமாகாத பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தியதற்காக 93 பீல்ட் ரெஜிமென்ட்டின் முடிதிருத்தும் ஏ. மணிக்கும் இதேபோன்ற தண்டனை வழங்கப்பட்டது.[11]
1987 டிசம்பர் 19 அன்று, காலை 11:30 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் பெண்கள் இந்திய அமைதிப்படையினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர். இளைய பெண்ணுக்கு வயது 25. இரண்டு பெண்களும் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.[9]
1987 டிசம்பர் 19 அன்று, காலை 11:30 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் பெண்கள் இந்திய அமைதிப்படையினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர். இளைய பெண்ணுக்கு வயது 25. இரண்டு பெண்களும் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.[9]
23 டிசம்பர் 1987 அன்று, ஏழைத் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது படித்த தமிழ் கன்னி ஒருவர், இரண்டு இந்திய அமைதிப்படையினரால் அடுத்தடுத்து கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.[9]
25 டிசம்பர் 1987 அன்று கைதடியில் திருமணமான பெண்களைப் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக 18 கர்வால் ரைபிள்ஸின் நெயில் பன்வாரி லால் மற்றும் ரைபிள்மேன் குகன் ராம் ஆகியோர் பணிநீக்கம் மற்றும் தலா 6 மாத சிறைத்தண்டனையை எதிர்கொண்டனர்.[11]
1987 ஆம் ஆண்டில், தமிழ் பத்திரிகையாளர் திரு. ஏ. லோகீசனுக்கு அப்போது ஆறு வயதாக இருந்தபோது, ஒரு தமிழ்ப் பெண் இந்திய அமைதிப்படையினரால் வயல்வெளியில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, அலறுவதைக் கேட்டார்.[12]
கருணாகரன் என்ற 16 வயது தமிழ் சிறுவன் அவனது சகோதரியுடன் இந்திய அமைதிப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டான். அவரது சகோதரியின் இராணுவத்தினரால் வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது சகோதரியின் அலறல் சத்தம் கேட்டு அவர் ஜன்னலுக்கு ஓடிச்சென்று பார்த்தபோது, இந்திய அமைதிப்படையினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதைக் கண்டார். அவன் பயந்து தன் வீட்டுக்குத் திரும்பி ஓடினான். பாதுகாப்பிற்காக அவரது பெற்றோர் பின்னர் கனடாவுக்கு அனுப்பினர். அவர் கனடாவுக்குச் செல்லும் வழியில், சியாட்டிலில் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானத்திலிருந்து இறக்கி, சியாட்டிலிலிருந்து ஒரு குற்றக் கும்பலுடன் ஒரு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடித்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அனுதாபம் கொண்ட சிறைக்காவலர் ஒருவர் அவரை சியாட்டிலில் வசிக்கும் தமிழ் வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார்.[13]
தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)[சான்று தேவை]
3.
9 நவம்பர் 1987
இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[சான்று தேவை]
4.
ஆகத்து 2-3, 1989
64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.[சான்று தேவை]
5.
மொத்தம்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.[சான்று தேவை]
தாக்கம்
ராஜீவ் காந்தி கொலை
ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[14] இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.
இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[15] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[16]
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
CM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑Sebastian, Rita (24 August 1989). "Massacre at Point Pedro". The Indian Express: pp. 8–9.
↑Gunaratna, Rohan (1993). Indian intervention in Sri Lanka: The role of India's intelligence agencies. South Asian Network on Conflict Research. ISBN955-95199-0-5. p.246
↑Somasundaram, D. (1997). "Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas". Medicine, Conflict and Survival13 (4): 333–347. doi:10.1080/13623699708409357.
↑Tamil Centre for Human Rights – Recorded figures of Arrests, Killings, Disappearances, Rapes, Displacements and Injuries to Tamils in the North East, Colombo and other regions (1956–2004) http://tchr.net/50_year_arrest_kill.htm
↑ 9.09.19.29.39.49.59.69.7பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
uthr.org என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑At the hands of the IPFK – savagery beyond belief – Tamil Times, April 1988, p11
↑ 11.011.1Kanwar Sandhu – IPKF men face court martial – charges include murder, rape, loot – Sunday Observer, Bombay, 18-24.12.88 – reproduced in Tamil Times, January 1989, p15
↑Frances Harrison (2012), Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War, Portobello books, p.122
↑Tamil Times, 15 April 2001 – Peace and suffering, p21
இந்த கட்டுரையிலோ கட்டுரைப் பகுதியிலோ உள்ள தகவல்கள் முழுமை அடையவில்லை. இதை நீங்கள் முழுமைப்படுத்தி உதவலாம். முழுமைப் படுத்துவதற்கான மூலங்கள் இதன் பேச்சுப் பக்கத்தில் இருக்கலாம்.