உன்னைச் சரணடைந்தேன்
உன்னைச் சரணடைந்தேன் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தில் வெங்கட் பிரபு, எஸ். பி. பி. சரண் மற்றும் மீரா வாசுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநராக அறிமுகமான இப்படத்தை சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றன. இந்த படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியானது. இது விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது என்றாலும், இது லாபகரமான படம் அல்ல என்று சரண் கூறினார்.[1] இப்படத்தின் பின்னர் தெலுங்கு மறு ஆக்கமான நாலோவை (2004) சமுத்திரக்கனி இயக்கினார். நடிகர்கள்
இசைஇப்படத்திற்கான இசையை சரணின் தந்தையான பிரபல பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மேற்கொண்டார். மேலும் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் ஆறு பாடல்களுகான வரிகளை எழுதினார். பாலசுப்பிரமண்யம் மூன்று பாடல்களை பாடினார், அதே நேரத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் ம. சு. விசுவநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர் முதல் பாடலை இணைந்து பாடினர். பாலசுப்பிரமண்யம் தவிர, அவரது சகோதரி எஸ். பி. சைலஜா மற்றும் அவரது மகள் பல்லவி ஆகியோரும் ஒவ்வொரு பாடல்களை பாடினர். படத்தின் பின்னணி இசையை ஸ்ரீனிவாச மூர்த்தி அமைத்தார்.
விருதுகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia