என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)
என்றென்றும் புன்னகை என்பது 2020-2022 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[2] இது நடிகை நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரிப்பில்,[3] நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், நிதின் ஐயர், விஷ்ணுகாந்த், சுஷ்மா நாயர் மற்றும் கவிதா ஆகியயோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[4][5] இத்தொடர் மார்ச்சு 16, 2020 முதல் மே 5, 2022 ஆம் ஆண்டு வரை பகல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 569 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. கதைச்சுருக்கம்ஆண்டாள் தனது பேரனை தென்றல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பின்னர், ஆகாஷ் ஆண்டாளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார் என்பதையும் தனிமனிதன் இல்லை என்பதையும் தென்றல் உணர்ந்தார். தென்றல், ஆகாஷை மணந்து பிடிவாதமான ஆண்டாளின் கட்டுப்பாட்டில் வாழ ஒப்புக்கொள்வாரா அல்லது, அவள் உண்மையான அன்பை வேறொரு இடத்தில் கண்டுபிடிப்பாளா என்பதே இக்கதையின் சுருக்கமாகும். நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் தென்றலாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடிக்கின்றார். இவர் சிவகாமி, மாயா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.[6] இவருக்கு ஜோடியாக நிதின் ஐயர், தீபக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகை கவிதா வில்லியாக மற்றும் ஆகாஷ் பாட்டியாக நடிக்கிறார்.[7] நேர அட்டவணைஇந்த தொடர் 16 மார்ச் 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3:00 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூலை 27, 2020 முதல் மீண்டும் அதே முதல்பகுதியில் இருந்து ஒளிபரப்பாகி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி, 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி பின்னர் 2022 இல் பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகி, நிறைவு பெற்றது.
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia