எம். ஏ. சுசீலா
எம். ஏ. சுசீலா (M.A. Susila) (பிறப்பு: பெப்ரவரி 27, 1949) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர் ஆவார். வாழ்க்கைக் குறிப்புஎம். ஏ. சுசீலா, 1949ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர். இவர் தாய் சோபனாதேவி தலைமை ஆசிரியை, தந்தை எஸ். அனந்தராம் காவல்துறைக் கண்காணிப்பாளர். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியில் வேதியல் இளநிலைப்பட்டமும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பணிக்காலத்திலேயே பகுதிநேர ஆய்வாளராக ஆய்வு மேற்கொண்டு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 36 ஆண்டுகள் பாத்திமாக்கல்லூரியில் பணி புரிந்து 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இடையே இரண்டாண்டுக்காலம் அக்கல்லூரியில் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். பணி நிறைவுக்குப்பின் ஏழாண்டுக்காலம் தில்லியில் இருந்தபின், மகள் மீனுபிரமோத்துடன் தற்போது கோவையில் வசித்து வருகிறார். எழுத்துத் துறைஎம். ஏ. சுசீலாவின் முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம் 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. இதைத் தொடர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள், கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், அமுத சுரபி, மங்கையர் மலர், அவள் விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல் ,கணையாழி, உயிரெழுத்து ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன; அவற்றுள் சில மலையாளம், கன்னடம் , இந்தி வங்காளம்,ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன.பேராசிரியப் பணியின்போது நிறை நிலை மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தேசிய, மாநில, பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை குறிப்பிடுகிறார் ஆக்கங்கள்நாவல்
(‘ யாதுமாகி’ நாவலின் ஆங்கில மொழியாக்கம்- Devi:The Boundless, by V.Kadambari, Emerald Publishers, 2020)
சிறுகதைத் தொகுப்புகள்
கட்டுரை நூல்கள்
மொழியாக்கம்
செம்பதிப்பு, நற்றிணை பதிப்பகம்,2016.
செம்பதிப்பு,நற்றிணை பதிப்பகம்,2018.
விருதுகள்
(கனடா தமிழ் இலக்கியத்தோட்ட விருது நல்லி- திசை எட்டும் விருது எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கிய ஜி யூ போப் விருது.)
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia