எர்ணாகுளம் சிவன் கோயில்
எர்ணாகுளதப்பன் கோயில் என்றும் அழைக்கப்படும் எர்ணாகுளம் சிவன் கோயில், கேரளத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாகும், இது கொச்சி நகரத்தின் நகரியப் பகுதியான எர்ணாகுளத்தின் மையத்தில் அமைந்துள்ளது. [1] சிவபெருமானுக்கு கட்டப்பட்ட இந்த கோயில், உள்ளூர் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்படி, நகரத்தின் கோயிலாக கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள பொதுவான நடைமுறையின்படி, தெய்வத்தை பயபக்தியுடன் எர்ணாகுளத்தப்பன் என்று அழைக்கின்றனர், அதாவது எர்ணாகுளத்தின் இறைவன் . இந்த கோயில் தர்பார் ஹால் மைதானத்திற்குள் அமைந்துள்ளது. கோயில் வரலாற்று நகரத்தின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது மற்றும் இது கொச்சி மகாராஜாக்களின் 7 அரச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோயில் இப்போது கொச்சி தேவசம் வாரியத்தின் நிர்வாகத்தில் உள்ளது. தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில் 1846 ஆம் ஆண்டில் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கரா வாரியாரின் தீவிரமான உதவியுடன் கட்டப்பட்டது. மேலும் கொச்சி இராச்சியத்தின் ஒரு அரச கோவிலாகவும் தகுதி உயர்தது. இந்த கோயில் 1-ஏக்கர் (4,000 m2) ) நிலத்தில் கட்டப்பட்டுள்ளது . இந்தக் கோயிலானது எட்டுமனூர் மகாதேவர் கோயில், கதுத்ருதி மகாதேவா கோயில், வைக்கம் சிவன் கோவில், செங்கன்னூர் மகாதேவர் கோயில், வடக்குநாதன் கோவில் போன்ற கேரளத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia