ஏமநாதன்ஏமநாதன் அல்லது இசை வல்லான் என்பவர் சைவ சமய தொன்மக் கதை இலக்கியமான திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் ஒரு இசைக் கலைஞராவார். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் இவர் ஏமநாதன் என்று குறிப்பிடப்படுகிறார். பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற்புராணத்தில் இவர் இசை வல்லான் என்று குறிப்பிடப்படுகிறார்.[1] கதைஏமநாதன் பாண்டிய நாட்டிற்கு வடக்கேயுள்ள சோழநாட்டினைச் சேர்ந்த பெயர் பெற்ற இசைப்புலவராவார். இவர் பாணர் குலத்தைச் சேர்ந்தவராவார். இவருக்கு இணையான இசைக்கலைஞர் யாரும் இல்லை என்ற புகழ் பெற்றவர். இவர் ஒருசமயம் பாண்டிநாட்டிற்கு வந்து மன்னன் வரகுணபாண்டியனைக் கண்டு இசைபாடி பரிசுபெறுகிறார். இசைக்கலையில் தனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்று பெருமிதத்துடன் பாண்டியனிடம் கூறுகிறார். இது மானப்பிரச்சனையாக உருவெடுக்கிறது. பாண்டியன், தன்னுடைய இசைப்புலவரான பாணபத்திரரை அழைத்து, ஏமநாதரை இசையில் வெல்ல முடியுமா என்று கேட்கிறார். பாணபத்திரர், ஏமநாதரை இசையில் வெல்வேன் என்று கூற, பாண்டியன் இசைப் போட்டிக்கு நாள் குறிக்கிறார். ஏமநாதருடைய சீடர்கள் மதுரை வீதிகளில் சென்று இனிய இசை பாடி, தமது புலமையைக் காட்டுகிறார்கள். ஏமநாதருடைய சீடர்கள் மதுரை வீதிகளில் சென்று இனிய இசை பாடி, தமது புலமையைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாடிய இசையைக் கேட்டுப் பாணபத்திரர் பெரிதும் வியப்படைகிறார். மறுபுறம் சீடர்களே இத்தகைய திறமையானவர்களாக இருக்கும் போது அவர்களின் ஆசான் எத்தகையவனாக இருப்பாரோ என்று அஞ்சுகிறார். இதனால் மதுரை சொக்கநாதரை வழிபட்டு இசைப் போட்டியில் வெற்றி பெற அருள வேண்டுகிறார். இசைப் போட்டி நிகழ்வதற்கு முந்திய நாள் மாலை, ஏமநாதர் தங்கியிருந்த வீதிவழியே விறகு வெட்டி ஒருவன் வருகிறான். அவன் ஏமநாதர் தங்கியிருந்த வீட்டித் திண்ணையின் இளைப்பாறுகிறான். இளைப்பாறிய பின்னர், ஓர் இசைப்பாட்டை சாதாரிப் பண்ணில் ( முல்லைப் பண் என்றும் கூறுவர். இக்காலத்தில் தேவகாந்தாரம் என்று கூறப்படும் இராகம்.) பாடுகிறான். அதை வீட்டிலிருந்து கேட்ட இசை மேதை ஏமநாதர் வியப்படைந்தார். அவர் வெளியே வந்து பார்த்து பாடியது ஒரு விறகு வெட்டி என்பதைக் கண்டு வியப்படைந்தார். அவனை யார் எவர் என்ற விவரங்களைக் கேட்டார். தான் பாணபத்திரரிடம் சிறிது காலம் இசை பயின்றதாகவும் எனக்கு இசை வரவில்லை என்று என்னை விரட்டிவாட்டார் என்றும், தற்போது விறகை விற்று பிழைத்து வருவதாகவும் கூறினான். பாணபத்திரரால் புறக்கணிக்கப்பட்ட சீடன் விறகு விற்றுப் பிழைப்பவனே இவ்வளவு இசைப்புலமை பெற்றிருப்பவனாக இருந்தால், பாணபத்திரரின் இசைப்புலமை எப்படி இருக்கும்! அவரை இசைப் போட்டியில் வெல்வது முடியாத செயல் என்று எண்ணினார். அன்றிரவு ஏமநாதர், தமது சீடர்களுடன் ஒருவருக்கும் சொல்லாமல் மதுரையை விட்டுப் போய்விடுகிறார்.[2] பரவலர் பண்பாட்டில்1965 இல் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் இவரின் கதை இடம்பெற்றது. அப்படத்தில் ஏமநாதன் பாத்திரத்தை பாலைய்யா ஏற்று நடித்தார். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia