ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடிஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி (European migrant crisis) [1][2][3][4][5] அல்லது ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி (European refugee crisis) [6][7][8][9][10]என்பது 2015ஆம் ஆண்டில் நடுநிலக் கடல் (அல்லது தென்கிழக்கு ஐரோப்பா) வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருமளவில் அகதிகளும், புலம் பெயர்வோரும் வந்தது குறித்ததாகும். இவர்கள் மத்திய கிழக்கு (சிரியா, ஈராக்), ஆபிரிக்கா (எரித்திரியா, நைஜீரியா, சோமாலியா, சூடான், காம்பியா), மேற்கு பால்கன் (கொசோவோ, அல்பானியா, செர்பியா, பொசுனியா எர்செகோவினா, மாக்கடோனியா), தெற்காசியா (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம்) ஆகிய பகுதிகளிலிருந்து புகலிடம்கோரி வந்து சேர்ந்தவர்கள் ஆவர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2015 துவக்கம்வரைக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான், எரித்திரியா நாடுகளிலிருந்து பெருமளவில் (71 சதவீதம்) அகதிகள் வந்திருந்தனர். இவர்களில் 72 சதவீதம் பேர் வயதுவந்த ஆண்கள் ஆவர். ஏப்ரல் 2015இல் சுமார் 2000 புலம் பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த 5 படகுகள் நடுநிலக் கடலில் மூழ்கின. இந்த நிகழ்வுகளில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக புலம்பெயர்வோர் நெருக்கடி (migrant crisis) எனும் சொற்றொடர் ஊடகங்களின் பயன்பாட்டுக்கு வந்தது. புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை விவரம்புலம்பெயர்விற்கான அனைத்துலக அமைப்பு, 16 அக்டோபர் 2015 அன்று வெளியிட்ட விவரங்கள்[11]:
செப்டம்பர் 2015 நிகழ்வுகள்
நாடுகளின் நிலைப்பாடுசெருமனியின் நிலைப்பாடுபுலம்பெயர்வோரை தனது நாட்டிற்கு வரவேற்பதால், பெரும்பாலானோர் தங்களின் புகலிடமாக செருமனியை தேர்ந்தெடுக்கிறார்கள். தனது நாட்டின் மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் புகலிடம்கோருவோரை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பகிர்மானத் திட்டத்தை செருமனி அரசு நடைமுறைப்படுத்தியது. இதனையொட்டி மாநிலங்களின் விமரிசனங்களையும் அரசு எதிர்கொண்டது.
அங்கேரியின் நிலைப்பாடுசெர்பியாவிலிருந்து அங்கேரி நாட்டிற்குள் நுழைந்த சுமார் 9000 புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்திய அங்கேரி காவற்துறை, அவர்களை தனது காப்பில் வைத்தது[17]. செர்பிய எல்லையை ஒட்டிய தனது பகுதிகளில் அவசரகால நிலையை அங்கேரி பிரகடனப்படுத்தியது[18]. குரோவாசியாவின் நிலைப்பாடுபுலம்பெயர்வோரை வரவேற்பதாக ஆரம்பத்தில் தெரிவித்த குரோவாசியா, புலம்பெயர்வோரின் முக்கிய இடமாக தனது நாட்டை கருதலாகாது என செப்டம்பர் 18 அன்று அறிவித்தது. 3 நாட்களில் சுமார் 17,000 புலம்பெயர்வோர் தனது நாட்டில் நுழைந்ததால், குரோவாசியா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது[19]. சுலோவேனியாவின் நிலைப்பாடுபுலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல், அவர்களை சுலோவேனியாவுக்கு குரோவாசியா அனுப்பிவருவதாக சுலோவேனியா குற்றஞ்சாட்டியது[20]. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia