கடகம்பள்ளி சுரேந்திரன்
கடகம்பள்ளி சுரேந்திரன் (Kadakampally Surendran) (பிறப்பு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 12) கேரள அரசின் பிணறாயி விஜயனின் முதல் அமைச்சகத்தில் (2016-2021) கூட்டுறவு, சுற்றுலா, தேவஸ்வம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) திருவனந்தபுரம் மாவட்டக் குழு செயலாளராகவும் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டு காலம் (2007-2016) பணியாற்றினார். கேரள மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராக பணியாற்றினார் (2006-2008).[2] கேரளாவின் 10வது சட்டமன்ற உறுப்பினராக கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 24000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் தலைவராகவும் இருந்தார் (1996-2001).[3] இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்கான கலாச்சார அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.[4] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) உறுப்பினரான இவர் தற்போது கட்சியின் கேரள மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார்.[5] இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 15வது கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia