கந்தசாமி கமலேந்திரன்
கந்தசாமி கமலேந்திரன் (Kandasamy Kamalendran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் ஆவார். அரசியலில்கமலேந்திரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் 13,632 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் மாதத்தில் இலங்கை அரசுத்தலைவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து 2014 ஆம் ஆன்டில் நீக்கப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டுநெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சின் என்பவரைப் படுகொலை செய்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் 2013 டிசம்பர் 3 ஆம் நாள் கொழும்பில் கைது செய்தனர்.[3] நெடுந்தீவு பிரதேச சபை தலைவரான டானியல் ரெக்சின் (44) 2013 நவம்பர் 26ம் திகதி புங்குடுதீவிலுள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 9 மிமீ கைத்துப்பாக்கி மற்றும் 11 ரவைகளும் கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்டன.[4] கமலேந்திரன் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் ஈழ மக்கள் சனநாயகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[5][6] ஆனாலும், வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.[7] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இவரை 2014 மார்ச் மாதத்தில் கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.[8] 2014 ஆகத்து 29 இல் இவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.[9] ஆனாலும், கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு எவரும் வராத காரணத்தால், அவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia