கந்தையா கனகரத்தினம்
கந்தையா கனகரத்தினம் (Kandiah Kanagaratnam, 28 சூலை 1892 - அக்டோபர் 3, 1962)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர். ஆரம்ப வாழ்க்கைகனகரத்தினம் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் கந்தையா. செல்லம்மா ஆகியோருக்கு 1892 சூலை 28 இல் (ஆடி 28) பிறந்தார்.[2][3] அரசுப் பணிகனகரத்தினம் 1911 இல் அரசு எழுத்தர் பணியில் இணைந்தார்.[2] 1925 இல் தலைமைக் கணக்காய்வுப் பரிசோதகரானார்.[2] பின்னர் இவர் பிரதிக் கணக்காய்வாளர் நாயகமாகவும், பின்னர் பதில் கணக்காய்வாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.[2] அரசியலில்கனகரத்தினம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு 9,487 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 செப்டம்பர் 3 இல் தமிழ்க் காங்கிரசு கட்சி டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததை அடுத்து கனகரத்தினம் கல்வி அமைச்சருக்கான நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட கனகரத்தினம், இம்முறை சுயேட்சை வேட்பாளர் வி. வீரசிங்கத்திடம் 426 வாக்குகளால் தோற்றார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia