கரிம்பாலர்கரிம்பாலர் என்போர் கேரளத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[1] இவர்களின் மொத்த எண்ணிக்கை 10,156 ஆகும். 5,170 பேர் ஆண்களும், 4,986 பெண்களும் ஆவர். இவர்களது தொழில் மரக்கரி சேகரிப்பது ஆகும். கரியைச் சேகரிப்பதால் கரிம்பாலர் என்ற பெயர் வந்ததாகவும் கருதுகின்றனர்.[2] இவர்களின் முன்னோர் கரும்பின் மூலம் பாலம் அமைத்ததாகவும், அதனால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர்.[3] கேரளத்தின் ஏனைய மக்களிடம் நிலவிய மருமக்கதாயம், சைசவவிவாகம் போன்ற சடங்கு முறைகள் இவர்களிடமும் காணப்படுகின்றன. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia