காங்ரா பள்ளத்தாக்கு
![]() காங்ரா பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Kangra Valley) என்பது மேற்கு இமயமலையில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும்.[1] நிர்வாக ரீதியாக, இது முக்கியமாக இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா இதன் உச்ச காலமாக இருக்கும். காங்ரி பேச்சுவழக்கு அங்கு பேசப்பட்டு வருகிறது. காங்ரா மாவட்டத்தின் தலைமையகமான தரம்சாலா பள்ளத்தாக்கில் உள்ள தௌலாதரின் தெற்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது.[2] இது மஸ்ரூர் குகை வரைக்கோயிலின் தாயகமாகும். இது "இமயமலையின் பிரமிடுகள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்படுவதற்கான போட்டியில் உள்ள இடமாக உள்ளது. நிலவியல்பள்ளத்தாக்கு ஏராளமான வற்றாத நீரோடைகளால் நிரம்பியுள்ளது. இந்நதிகள் மூலம் பள்ளத்தாக்குக்கு நீர்ப்பாசனம் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தாக்கு சராசரியாக 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. காங்ரா பள்ளத்தாக்கு ஒரு வேலைநிறுத்த பள்ளத்தாக்கு மற்றும் தௌலாதர் மலைவரம்பின் அடிவாரத்தில் இருந்து பியாஸ் ஆற்றின் தெற்கே பரவியுள்ளது. தௌலாதரின் மிக உயரமான சிகரம், வெள்ளை மலை, பள்ளத்தாக்குக்கும் சம்பாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மேலும் இது 15,956 அடி (4,863 மீ) உயரத்தில் உள்ளது. வரம்பின் சிகரங்கள் பள்ளத்தாக்கு தளத்திலிருந்து சுமார் 13,000 அடி (4,000 மீ) உயரத்தில் உள்ளன. அதன் அடிப்பகுதியில் இருந்து கூர்மையாக உயர்ந்து காணப்படுகின்றது. இதற்கிடையில் குறைந்த உயரம் கொண்டமலைகள் எதுவும் இல்லை.[2] மொழிஒரு தனித்துவமான பிராந்திய பேச்சுவழக்கு, காங்ரி, காங்ரா பள்ளத்தாக்கில் பேசப்படுகிறது.[3] முக்கிய நகரங்கள்காங்ரா மாவட்டத்தில் இயோல் என்ற பாசறை நகரம் 32.17 ° N 76.2 ° E இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,221 மீ (4,006 அடி) ஆகும். போக்குவரத்துசாலைஇமாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து சாலைகள் மூலம் இந்த பள்ளத்தாக்கு இணைக்கிறது. தொடர்வண்டிப் பாதைகாங்ரா பள்ளத்தாக்கு இரயில்வே என்பது 164 கி.மீ நீளமுள்ள குறுகிய பாதை தொடர் வண்டி பாதையாகும். இது பள்ளத்தாக்கை பதான்கோட்டுடன் இணைக்கிறது. இது அகல ரயில் பாதை வலைப்பின்னலுக்கு அருகிலுள்ள ரயில் பாதையாகும். வான்வழிகாகல் விமான நிலையம், காங்க்ரா வானூர்தி நிலையம் என்றும் தர்மசாலா-காங்க்ரா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் காங்ராவுக்கு அருகிலுள்ள காகலில் அமைந்துள்ள ஒரு விமான நிலையமாகும். இது தர்மசாலாவின் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்மெக்லியாட் கஞ்ச் என்பது காங்ராவிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்தியாவின் பிரபலமான மலையேற்ற பாதையில் உள்ள டிரையுண்ட் மலையேற்றமும் ஒன்றாகும்.[4] பால் பள்ளத்தாக்கு] மலையேற்றம் - இது மறைக்கப்பட்ட இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுவதில்லை. காங்ராவில் நவாலா & ஹராலி [5] திருவிழா போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும் ஒரு விழாவாகும். 1905 பூகம்பம்1905 ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 6:19 மணிக்கு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை இந்த பள்ளத்தாக்கு கண்டது. இதன் விளைவாக காங்ரா பகுதியில் சுமார் 19,800 பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். காங்ரா, மெக்லியாட்கஞ்ச் மற்றும் தரம்சாலா நகரங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.[1][6][7] குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia