காந்தர்பல்
காந்தர்பல் (Ganderbal) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்த காந்தர்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,619 மீட்டர் (5,312 அடி) உயரத்தில் இமயமலையில் உள்ளது. காந்தர்பல் மாவட்டத்தின் தெற்கில் சிறீநகர மாவட்டம், வடக்கில் பந்திபோரா மாவட்டம், வடகிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் அனந்தநாக் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் பாரமுல்லா மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 19 வார்டுகளும், 3,989 வீடுகளும் கொண்ட காந்தர்பால் நகராட்சியின் மக்கள்தொகை 28,233 ஆகும். அதில் ஆண்கள் 15,045 மற்றும் பெண்கள் 13,188 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4993 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.07% ஆகும். மக்கள்தொகை இசுலாமியர்கள் 98.21%, இந்துக்கள் 1.37% மற்றவர்கள் 0.42% ஆகவுள்ளனர். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia