கா. உதயசங்கர்
கா. உதயசங்கர் (பிறப்பு: 10 பிப்ரவரி 1960) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்[1]. இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.[2] இவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருது ஆதனின் பொம்மை என்ற சிறார் நாவலுக்காக வழங்கப்பட்டது.[3] 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்.[4] பிறப்புஇன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் 10 பிப்ரவரி 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் உதயசங்கர். கல்வியும் பணியும்இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். இந்திய இரயில்வேயில் பணி செய்தவர். இலக்கியப்படைப்புகள்சிறுகதை நூல்கள்
குறுங்கதை
குறுநாவல்
கவிதை நூல்கள்
குழந்தை இலக்கியம்
மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு
குழந்தை இலக்கியம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு
கட்டுரை நூல்கள்
பதவிகள்உதயசங்கர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினராகச் செயலாற்றி வருகிறார். 2021 முதல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.[5] விருதுகள்
தனி வாழ்க்கை12 ஏப்ரல் 1987 அன்று மல்லிகா என்பவரைத் திருமணம் செய்தார் உதயசங்கர். இவ்விணையருக்கு நவீனா, துர்கா என்ற மகள்கள் உள்ளனர், இருவரும் ஓமியோபதி மருத்துவர்கள் ஆவர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia