கிளியோபாட்ரா தியா
![]() கிளியோபாட்ரா தியா (Cleopatra Thea), எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் பார்வோன் ஆறாம் தாலமி-இரண்டாம் கிளியோபாட்ரா இணையரின் மகள் ஆவார். கிளியோபாட்ரா தியாவை, முதலில் செலூக்கியப் பேரரசின் சிரியா ஆளுநர்களான இருந்த செலூக்கிய இளவரசர்களான அலெக்சாண்டர் பாலாஸ், இரண்டாம் திமெட்ரியஸ் நிக்காத்தர் மற்றும் ஏழாம் அந்தியோகஸ் ஆகியவர்களை ஒருவர் பின் ஒருவராக மணந்தார். இவரது கணவர்கள் மூலம் ஆறாம் அந்தியோகஸ், ஐந்தாம் செலூக்கஸ், எட்டாம் அந்தியோகஸ் மற்றும் ஒன்பதாம் அந்தியோகஸ் பிறந்தனர். இவர் கனவர்களை ஒருவர் பின் ஒருவராக திருமணமுறிவு செய்ததாலும்; வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததாலும், கிளியோபாட்ரா தியா சிரியாவின் இணை-ஆட்சியாளராக, தனது மகன் ஐந்தாம் செலூக்கசுடன் கிமு 126 முதல் கிமு 125 வரையிலும், பின் மகன் எட்டாம் அந்தியோகசுடன் கிமு 125 முதல் 121 முடியவும் பதவியில் இருந்தார்.[1][2] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia