செலுசிட் பேரரசு அல்லது செலூக்கியப் பேரரசு (Seleucid Empire) (/sɪˈljuːsɪd/;[6]பண்டைக் கிரேக்கம்: Βασιλεία τῶν Σελευκιδῶν, Basileía tōn Seleukidōn) (ஆட்சிக் காலம்: கி.மு. 312 - கி.மு. 63) என்பது செலூக்கிய வம்சத்தினரால் ஆளப்பட்டப் பேரரசாகும். பேரரசர் அலெக்சாண்டரின் ஆசியப் படையெடுப்பிற்குப் பின் தெற்காசியா, நடு ஆசியா மற்றும் மேற்காசியாவின் பகுதிகளை கி.மு. 312 முதல் கி.மு. 63 முடிய கிரேக்கப் போர்ப்படைத் தலைவர் செலூக்கசு நிக்காத்தர் முதல், பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் பிலிப்பு வரை 375 ஆண்டுகள் ஆண்டனர்.[7]
அலெக்சாண்டர் பஞ்சாப் மன்னர் போரசுடனான போரில் வென்று, மீண்டும் கிரேக்கத்திற்கு திரும்பும் வழியில் பாபிலோனில் மறைந்த பின், அலெக்சாண்டர் வென்ற பகுதிகளை அவரது படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவரான செலூக்கஸ் நிக்காத்தர், கிரேக்கத்திற்கு கிழக்கில் அமைந்த ஆசியப் பகுதிகளுக்கு கி.மு. 312 முதல் பேரரசர் ஆனார்.
செலூக்கியப் பேரரசின் நீண்டகால ஆட்சியால், ஆசியாவில் கிரேக்கக் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை பரவியது.
இந்தியா மீதான படையெடுப்பு
கி.மு 307-இல் முதலாம் செலூக்கசு நிக்கோட்டரின் மௌரியப் பேரரசர்சந்திரகுப்த மௌரியர் மீதான படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலூக்கியப் பேரரசின் ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது. மேலும் செலூக்கசு நிக்காத்தர் தனது மகளை சந்திர குப்த மௌரியருக்கு மணம் முடித்து வைத்ததுடன், செலூக்கியப் பேரரசின் தூதுவராக மெகஸ்தெனஸ் என்பவரை மௌரியப் பேரரசுசில் நியமித்தார்.
வீழ்ச்சிக் காலம்
கிமு 281-இல் செலூக்கியப் பேரரசின் வரைபடம்கிமு 200ல் செலூக்கியப் பேரரசின் வரைபடம்
கி.மு. 141-இல் செலூக்கியப் பேரரசின் தலைநகரங்களில் ஒன்றான செலுசியா நகரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. பின்னர் கிபி முதல் நூற்றாண்டில் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், செலூக்கியப் பேரரசிடமிருந்த சிரியாவை ஆர்மீனியர்கள் கைப்பற்றினர்.
கிபி 64-இல் உரோமானியப் படைத்தலைவர் பாம்பேஅந்தியோக்கியா நகரத்தில் புகுந்து சிரியாவைக் கைப்பற்றியதன் மூலம் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சி கண்டது.
வீழ்ச்சிக்குப் பின்னர்
செலூக்கியப் பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் பிலிப்பு ஆட்சிக் காலத்தில் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இறுதியில் செலூக்கியப் பேரரசு கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடு என சிதறுண்டது. இந்தோ - கிரேக்க சிற்றரசர்கள் கி.மு. 100 முதல் கி.பி. 10 வரை ஆண்டனர்.
செலூக்கிய ஆட்சியாளர்கள்
செலூக்கஸ் நிக்காத்தர் வெளியிட்ட அலெக்சாண்டரின் உருவம் பொறித்த நாணயம்செலூக்கியப் பேரரசர் நான்காம் அந்தியோக்கசு எபிபனாஸ் (கி.மு. 175–163) உருவ நாணயம்அலெக்சாண்டர் முதலாம் பாலாஸ் (கி.மு. 150–145) உருவ நாணயம்செலூக்கியப் பேரரசின் முதல் உள்ளூர் ஆளுனர் முதலாம் பகாடேட்ஸ் (கி.மு. 290–280)
↑Cohen, Getzel M; The Hellenistic Settlements in Syria, the Red Sea Basin, and North Africa, pp. 13.
↑Lynette G. Mitchell; Every Inch a King: Comparative Studies on Kings and Kingship in the Ancient and Medieval Worlds, page 123.
↑ 3.03.1Richard N. Frye, The History of Ancient Iran, (Ballantyne Ltd, 1984), 164.
↑Julye Bidmead, The Akitu Festival: Religious Continuity and Royal Legitimation in Mesopotamia, (Gorgias Press, 2004), 143.
↑ 5.05.15.25.3Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History3 (3/4): 115–138. doi:10.2307/1170959.
↑Oxford English Dictionary, 1st ed. "Seleucid, n. and adj." Oxford University Press (Oxford), 1911.