கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)
கி. கஸ்தூரிரங்கன் என்னும் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan, 24 அக்டோபர் 1940 - 25 ஏப்ரல் 2025) ஒரு விண்வெளி அறிவியலாளர். இவர் 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை அறிவியலாளராகப் பணிபுரிந்தார்.[1] இராசத்தான் நடுவண் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்,[2] சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்துள்ளார்[3]. மேலும், கருநாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்[4]. கஸ்தூரிரங்கன் மாநிலங்களவையின் (2003-09) உறுப்பினராகவும் முந்தைய திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2004 ஏப்ரல் முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இயக்குநராகவும் இருந்தார். இவர் இந்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய மூன்று விருதுகளான பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷன் (1992), பத்ம விபூஷன் (2000) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[5] கல்விநெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். அங்குள்ள ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும், மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில், 1971-இல், உயர் ஆற்றல் வானியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[6] குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள், இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள், பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள்கள், ஏவு வாகனங்கள் என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். கஸ்தூரிரங்கன் தலைமையில் 2020-ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.[7] இறப்புகஸ்தூரிரங்கன் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் உடல் நலம் குன்றி இறந்தார்.[8] விருதுகள்
கஸ்தூரிரங்கன் 27 பல்கலைக்கழகங்களிலிருந்து பெருமைமிகு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[20] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia