கீதாஞ்சலி (நடிகை)
கீதாஞ்சலி (1947 - 31 அக்டோபர் 2019) என்பவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய நடிகை ஆவார்.[2] ஆறு தசாப்தங்களை நெருங்கிய இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் பல மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960 இல் ராணி ரத்னபிரபா என்ற தெலுங்குப் படத்தில் நடனக் கலைஞராக முதன்முதலில் இவர் தோன்றினார். 1961 ஆம் ஆண்டு சீதா ராம கல்யாணம் மூலம் இயக்குநராக அறிமுகமான என். டி. ராமராவ் இவரை கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார். முரளி கிருஷ்ணா (1964), டாக்டர் சக்கரவர்த்தி (1964), இல்லு (1965), சம்பராலா ராம்பாபு (1970), காலம் மாறிந்தி (1972), அப்பாயிகாரு அம்மைகாரு (1973) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் பிரபலமானார். நந்தி விருதுக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைலட்சுமிகாந்த்-பியாரேலால் தயாரிப்பில் உருவான பரஸ்மணி (1963) என்ற இந்தித் திரைப்படத்தில் இவர் பணியாற்றினார். இவரது இயற் பெயரான மணி என்பது படத்தின் தலைப்பில் ஏற்கனவே இடம்பெற்றிருந்ததால், படத் தயாரிப்பாளர் இவரது பெயரை கீதாஞ்சலி என்று மாற்றினார்.[2] கீதாஞ்சலி, நடிகர் ராம கிருஷ்ணாவை 15 ஆகத்து 1974 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, தொடு நீடா (1965), ஹந்தகுலோஸ்துன்னாரு ஜாக்ரத்தா (1966), ராஜயோகம் (1967), ரணபேரி (1968), நேனு நா தேசம் (1973) போன்ற பல படங்களில் நடித்தார். இறப்புகீதாஞ்சலி 31 அக்டோபர் 2019 அதிகாலை மாரடைப்பால் இறந்தார். ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்தார்.[3] திரைப்படவியல்தமிழ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia