குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
வரலாறுகுட்டிப்புரத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றான திரூர் தொடருந்து நிலையமானது கேரத்தின் பழமையான தொடருந்து நிலையம் ஆகும். [2] திரூரில் இருந்து பேப்பூர் வரையிலான இருப்புப் பாதை மாநிலத்தின் பழமையான இருப்புப் பாதையாகும், இது தானூர், பரப்பனங்காடி மற்றும் வள்ளிக்குன்னு தொர்ருந்து நிலையங்களையும் கொண்டுள்ளது. [2] திரூர் - பேப்பூர் தொடருந்து பாதை 1861, மார்ச் 12 இல் செயல்படத் தொடங்கியது. [3] அதே ஆண்டில், திருரூரில் இருந்து குட்டிப்புரம் வரை திருநாவாய் வழியாக இருப்புப் பாதை அமைக்கப்பட்டு, 1861 மே முதல் நாளில் இருந்து செயல்படத் தொடங்கியது [2] குட்டிப்புரம் தொடருந்து நிலையம் மாநிலத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். [2] பின்னர் 1862 இல், குட்டிப்புரத்தில் இருந்து பட்டாம்பி வரை இருப்புப் பாதை விரிவுபடுத்தப்பட்டது, பின்னர் அது மீண்டும் அதே ஆண்டில் பட்டாம்பியில் இருந்து போத்தனூர் வரை விரிவாக்கப்பட்டது. [2] பின்னர் 1861-1862 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பேப்பூர் - போதனூர் பாதையின் விரிவாக்கமாக சென்னை - மங்களூர் இருப்புப் பாதை உருவாக்கப்பட்டது. [2] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia