கே. எஸ். சௌந்தரம்

கே. எஸ். சௌந்தரம் (K. S. Soundaram) ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்தியாவின் 10 ஆவது மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஆவார். இவர் ஒரு கவிஞரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஈரோடு மாவட்டத்தில் 1946 ஜூன் 2 ஆம் தேதி பிறந்த கே.எஸ்.சவுந்தரம் திருச்சிராப்பள்ளியின் சீதலட்சுமி ராமசாமி கல்லூரியில் பயின்றார்; பூ. சா. கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றுள்ளார். அவர் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முடித்துள்ளார். முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு கலித்தொகையில் உள்ள நாடக அம்சங்கள் என்பதாகும்.[1]

தொழில்

சௌந்தரம் தமிழ் இலக்கியம் குறித்த தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்பட்டவர்.[1] 1972 ஆம் ஆண்டில், அவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) உறுப்பினரானார், மேலும் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை அவரது உத்வேகத்திற்குரிய முன்னோடிகள் என்று மேற்கோளிட்டுள்ளார். அவர் போட்டியிட்ட 1991 இந்திய பொதுத் தேர்தலில் இருந்து திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட போது 5,21,580 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த கே. பி. ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 2,07,099 வாக்குகள் பெற்றார்.[2] அவர் வெற்றி பெற பெற்ற வாக்குகள் அந்த தேர்தலில் ஒரு தனிநபர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகும். மேலும் அவரது வெற்றிக்கான வித்தியாசமான 3,14,481 வாக்குகள் என்பது தென்னிந்தியாவில் அந்த பொதுத் தேர்தலில் அதிகபட்சமாக இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

சௌந்தரம், 9 ஜூன் 1969 இல். ஆர். ஆறுமுகம் என்ற பேராசிரியரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Soundaram, Dr. (Smt.) K.S." மக்களவை (இந்தியா). Retrieved 30 November 2017.
  2. "Statistical Report on General Elections, 1991 to the Tenth Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 365. Retrieved 30 November 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya